மூடியே கிடக்கும் கிராமப்புற இ-சேவை மையங்கள்: சான்றிதழ்கள் பெற அவதிக்குள்ளாகும் கிராமமக்கள்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தாலுகாவிற்கு உட்பட்ட கிராமங்களில் இ-சேவை மையங்கள் மூடியே கிடப்பதால், சான்றிதழ்களைப் பெற விண்ணப்பிக்க முடியாமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தாலுகாவிற்கு உட்பட்ட கிராமங்களில் இ-சேவை மையங்கள் மூடியே கிடப்பதால், சான்றிதழ்களைப் பெற விண்ணப்பிக்க முடியாமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தாலுகாவிற்குட்பட்ட 17 ஊராட்சிகளைச் சேர்ந்த மக்கள், வருவாய் சான்றிதழ்கள், சாதி சான்றிதழ்கள், புதிய குடும்ப அட்டைப் பெறுவதற்கான விண்ணப்பப் பதிவுகள், நிலம் தொடர்பான சிட்டா, பட்டா அடங்கல்கள் உள்ளிட்ட பல்வேறு அரசு சார்ந்த சான்றிதழ்களைப் பெற நகர் பகுதியில் உள்ள வருவாய் வட்டாச்சியர் அலுவலகங்களுக்கு நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது. இதனால், பொதுமக்களின் சிரமங்களை போக்க, பல கோடி ரூபாய் செலவில் இ-சேவை மையங்கள் அரசு சார்பில் கட்டப்பட்டன.

3 ஆண்டுகளுக்கு முன்பாக கட்டி முடிக்கப்பட்ட இ-சேவை மையக் கட்டிடங்கள் எதுவும் இதுவரை திறக்கப்படாமல் பூட்டியே கிடக்கின்றன. இதனால், எந்த அடிப்படை நோக்கத்தோடு இதுபோன்ற கிராமப்புற இ-சேவை துவக்கப்பட்டதோ, அதன் பயன்பாடு மக்களை சென்றடையவே இல்லை என பொதுமக்கள் வேதனைத் தெரிவிக்கின்றனர். வழக்கம் போல, அந்தந்த வருவாய் வட்டாச்சியர் அலுவலகங்களில் சான்றிதழ்கள் வேண்டி கிராமமக்கள் நாள் கணக்கில் அலைய வேண்டிய சூழலே நிலவி வருகிறது.

மேலும், ஆண்டு கணக்கில் மூடிக்கிடக்கும் இ-சேவை மையங்கள் பலவும் சமூகவிரோதிகளின் கூடாரமாகவும், மதுக்கூடமாகவும் மாறி வருகிறது. இது ஒருபுறம் இருக்க, பயன்படுத்தப்படாத பொருட்களை கொட்டி வைக்கும் குப்பைக்கிடங்காவும் இந்த புதிய கட்டிடங்களை, ஊராட்சி நிர்வாகங்களே மாற்றியுள்ளன. எனவே, தமிழக அரசு உடனடியாக இப்பிரச்சனையில் கவனம் செலுத்தி கிராமப்புற இ-சேவை மையக் கட்டிடங்களை செயல்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்பதே கிராமப்புற மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...

பொள்ளாச்சி MP கே.ஈஸ்வரசாமி கோவையில் ரூ.57 லட்சம் மதிப்பிலான நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மேயர் கா....

பொள்ளாச்சி எம்.பி. மேம்பாடு நிதியில் ரூ.57 லட்சம் மதிப்பில் புதிய நியாயவிலைக் கடைகள், அங்கன்வாடி மையம் திறப்பு

கோவை மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.5...