ஏர்செல் மேக்சிஸ் வழக்கு: கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய ஏப்., 16 வரை தடை

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் கார்த்தி சிதம்பரத்திற்கு முன்ஜாமீன் வழங்கிய சிறப்பு நீதிமன்றம், அவரை ஏப்ரல் 16-ம் தேதி வரை கைது செய்யத் தடை விதித்துள்ளது.

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் கார்த்தி சிதம்பரத்திற்கு முன்ஜாமீன் வழங்கிய சிறப்பு நீதிமன்றம், அவரை ஏப்ரல் 16-ம் தேதி வரை கைது செய்யத் தடை விதித்துள்ளது. 

ஏர்செல்-மேக்சிஸ் மோசடி வழக்கில் கார்த்தி சிதம்பரத்துக்கு தொடர்பு இருப்பதற்கு போதுமான ஆதாரங்கள் இருப்பதாக சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்ட ஆணையம் சமீபத்தில் அறிக்கை வெளியிட்டது. எனவே, அவர் மீதான விசாரணையை சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விரைவுபடுத்தினர். ஐ.என்.எஸ். மீடியா வழக்கில் கார்த்திக்கு டெல்லி உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கிய நிலையில், அவரை சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்யலாம் எனவும் பேசப்பட்டது. 

இதையடுத்து, தன்னை கைது செய்யாமல் இருக்க டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்தார். இந்த மனு இன்று நீதிபதி ஓ.பி.ஷைனி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, கார்த்தி சிதம்பரத்துக்கு முன் ஜாமீன் வழங்கக்கூடாது என சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை வாதிட்டது. மேலும், கார்த்தியின் மனுவுக்கு விரிவான பதில் மனு தாக்கல் செய்வதற்கு மூன்று வார அவகாசம் வழங்க வேண்டும் என்றும், அதுவரை இடைக்கால பாதுகாப்பு எதுவும் வழங்கக்கூடாது என்றும் கேட்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, கார்த்தி சிதம்பத்துக்கு முன்ஜாமீன் வழங்கியதுடன், அவரை ஏப்ரல் 16-ம் தேதி வரை கைது செய்யக்கூடாது என உத்தரவிட்டார். விசாரணை அதிகாரிகள் அழைக்கும்போது விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று கார்த்திக்கு நிபந்தனை விதித்த நீதிமன்றம், வழக்கின் அடுத்த விசாரணையை 16-ம் தேதிக்கு ஒத்திவைத்தது. வழக்கு விசாரணையின்போது சிதம்பரம் மற்றும் அவரது மனைவி நளினி சிதம்பரம் ஆகியோர் நீதிமன்றத்திற்கு வந்திருந்தனர். 

Newsletter

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...

பொள்ளாச்சி MP கே.ஈஸ்வரசாமி கோவையில் ரூ.57 லட்சம் மதிப்பிலான நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மேயர் கா....

பொள்ளாச்சி எம்.பி. மேம்பாடு நிதியில் ரூ.57 லட்சம் மதிப்பில் புதிய நியாயவிலைக் கடைகள், அங்கன்வாடி மையம் திறப்பு

கோவை மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.5...

கோவை ரயில் நிலையம் அருகே 1.4 கிலோ கஞ்சாவுடன் பீகார் நபர் கைது.

கோவை மத்திய ரயில் நிலையம் அருகே விநாயகர் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ரேஸ் கோர...

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...