தபெதிகவினர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டதை கண்டித்து வரும் 29 ம் தேதி அனைத்து கட்சி ஆர்ப்பாட்டம்

தந்தை பெரியார் திராவிட கழகத்தை சேர்ந்த பாலன், ஜீவானந்தம் ஆகிய இருவர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டது கண்டிக்கதக்கது என்றும் சி.பி.எம் அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசிய வி.எச்.பி அமைப்பினர் மீது ஏன் குண்டர் சட்டம் போட வில்லை என்றும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் கு.இராமகிருட்டிணன் கேள்வி எழுப்பியுள்ளார்

கோவை: தந்தை பெரியார் திராவிட கழகத்தை சேர்ந்த பாலன், ஜீவானந்தம் ஆகிய இருவர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டது கண்டிக்கதக்கது என்றும் சி.பி.எம் அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசிய வி.எச்.பி அமைப்பினர் மீது ஏன் குண்டர் சட்டம் போட வில்லை என்றும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் கு.இராமகிருட்டிணன் கேள்வி எழுப்பியுள்ளார்.

கோவை மாவட்ட பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கைது செய்யப்பட்ட மூவரில் இருவர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது. இது குறித்து தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் கு.இராமகிருட்டிணன் கூறியதாவது, பா.ஜ.க அலுவலகம் தாக்கப்பட்டது தொடர்பாக காவல் துறை கேட்டுக்கொண்டதால் மூன்று பேரை சரண் அடையவைத்தாகவும், பா.ஜ.க அலுவலகம் தாக்கப்பட்டதை வைத்து மதகலவரத்தை தூண்ட பா.ஜ.க திட்டமிட்டு இருந்ததாக புகார் தெரிவித்தார்.

அதை தவிர்க்கவே மூன்று பேர் சரண் அடைய வைக்கப்பட்டனர். பாலன், ஜீவானந்தம் ஆகிய தபெதிகவினர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டது கண்டிக்கதக்கது என்றார். மாவட்ட தலைவர் கார் எரிக்கப்பட்டதற்கும் தபெதிக காரணம் என விடுதலை சிறுத்தைகள்,  தபெதிகவினரை திருமண மண்டபத்தில் வைத்து விசாரணை என்ற பெயரில் போலீசார் சித்திரவதை செய்து வருகின்றனர்.

கடந்த 6 மாதத்திற்கு முன்பு சி.பி.எம் அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசிய வி.எச்.பி அமைப்பினர் மீது ஏன் குண்டர் சட்டம் போடவில்லை எனவும் கேள்வி எழுப்பினார். பிரச்சினைகளுக்கு மூலகாரணமான ஹெச்.ராசா மீது ஒரு சின்ன வழக்கு கூட இதுவரை போடவில்லை என்றார்.

தபெதிகவினர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டதை கண்டித்து வரும் 29 ம் தேதி அனைத்து கட்சிகளும் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக தெரிவித்தார். காவல் துறை விசாரணை ஒரு சார்பாகவே நடத்தப்படுகின்றது என்றும், கார் எரிக்கப்பட்ட நிகழ்வு உட்கட்சி மோதல் காரணமாக இருக்க கூடும். போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என்பதற்காக இது போன்ற செயல்களை அவர்கள்  செய்து இருக்கலாம் எனவும் கூறினார்.

Newsletter

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...

பொள்ளாச்சி MP கே.ஈஸ்வரசாமி கோவையில் ரூ.57 லட்சம் மதிப்பிலான நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மேயர் கா....

பொள்ளாச்சி எம்.பி. மேம்பாடு நிதியில் ரூ.57 லட்சம் மதிப்பில் புதிய நியாயவிலைக் கடைகள், அங்கன்வாடி மையம் திறப்பு

கோவை மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.5...

கோவை ரயில் நிலையம் அருகே 1.4 கிலோ கஞ்சாவுடன் பீகார் நபர் கைது.

கோவை மத்திய ரயில் நிலையம் அருகே விநாயகர் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ரேஸ் கோர...

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...