திருப்பூர் சிவா டெக்ஸ்டைல்ஸ் கட்டிடத்திற்கு சீல்: விதிமுறைகளை மீறியதால் நீதிமன்றம் நடவடிக்கை

விதிமுறைகளை மீறி கட்டிடம் கட்டப்பட்டதாகக் கூறி திருப்பூர் சிவா டெக்ஸ்டைல்ஸ் கட்டிடத்திற்கு சீல் வைத்து நீதிமன்றம் நடவடிக்கை எடுத்துள்ளது.

திருப்பூர்: விதிமுறைகளை மீறி கட்டிடம் கட்டப்பட்டதாகக் கூறி திருப்பூர் சிவா டெக்ஸ்டைல்ஸ் கட்டிடத்திற்கு சீல் வைத்து நீதிமன்றம் நடவடிக்கை எடுத்துள்ளது. 

திருப்பூர் குமரன் சாலையில் இயங்கி வரும் சிவா டெக்ஸ்டைல்ஸ் கட்டிடமானது விதி முறைகளை மீறி கட்டப்பட்டுள்ளதாகவும், அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் கூடுதலாக கட்டிடம் கட்டப்பட்டுள்ளதாகவும் திருப்புர் மாநகராட்சி மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.



இந்த வழக்கானது சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் நேற்று விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டிடத்திற்கு 24 மணி நேரத்திற்குள் சீல் வைக்குமாறு மாநகராட்சி அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து திருப்பூர் மூன்றாவது மண்டல உதவி ஆணையர் சபியுல்லா குமரன் சாலையில் உள்ள சிவா டெக்ஸ்டைல்ஸ் கட்டிடத்திற்கு சீல் வைத்தார்.



விதிமுறைகளை மீறி குமரன் சாலை மற்றும் புது மார்க்கெட் வீதியில் பல கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ள நிலையில், ஒரு கட்டிடத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ள சம்பவம் அனைத்து கட்டிடங்களுக்கும் தொடரும் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ளது.



Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...

பொள்ளாச்சி MP கே.ஈஸ்வரசாமி கோவையில் ரூ.57 லட்சம் மதிப்பிலான நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மேயர் கா....

பொள்ளாச்சி எம்.பி. மேம்பாடு நிதியில் ரூ.57 லட்சம் மதிப்பில் புதிய நியாயவிலைக் கடைகள், அங்கன்வாடி மையம் திறப்பு

கோவை மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.5...