கோவை விமான நிலைய விரிவாக்கம்: தென்னை மரத்திற்கு தலா ரூ.50,000 இழப்பீடு கோரும் விவசாயிகள்

கோவை: கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்காக வெட்டப்படும் தென்னை மரம் ஒன்றிற்கு ரூ. 50,000 இழப்பீடு வழங்க வேண்டும் என தென்னை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை: கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்காக வெட்டப்படும் தென்னை மரம் ஒன்றிற்கு ரூ. 50,000 இழப்பீடு வழங்க வேண்டும் என தென்னை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பீளமேட்டை அடுத்த சித்ராவில் உள்ள கோவை சர்வேதச விமான நிலையத்தை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய மத்திய, மாநில அரசுகள் ஒப்புதல் அளித்தன. இதையடுத்து, விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்காக அருகில் உள்ள சின்னியம்பாளையம், நீலம்பூர், இருகூர் போன்ற பகுதிகள் தேர்வு செய்யப்பட்டன. அப்பகுதிகளில் தேர்வு செய்யப்பட்ட இடங்களை அரசு எடுத்துக்கொள்ளும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, ஆக்கிரமிக்கப்படும் பகுதிகளில் உள்ள நிலங்களுக்கு சதுரஅடிக்கு ரூ. 1,500-யும், விவசாய நிலங்களுக்கு சதுர அடிக்கு ரூ. 900-யும் வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும், ஒருசிலர் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்ய ஒப்புதல் கடிதம் கொடுத்துள்ளனர்.

இந்த நிலையில், கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்காக வெட்டப்படும் தென்னை மரம் ஒன்றிற்கு ரூ. 50,000 இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரனிடம் தமிழ்நாடு விவசாயிகள் கூட்டமைப்பினர் மனு அளித்தனர். அந்த மனுவில், கூறியிருப்பதாவது, இந்தப் பகுதிகளில் 18 முதல் 25 ஆண்டுகள் விளைச்சல் கொடுத்த தென்னை மரங்களே உள்ளன. ஆண்டுக்கு 200 தென்னை மரங்கள் விளைகின்றன. மேலும், மாசு மற்றும் பூச்சிக் கொல்லிகளில் இல்லாத மண் மற்றும் நிலத்தடி நீர் உள்ளது. குறிப்பாக, இந்தத் தென்னை மரங்கள் அகற்றப்படுவதால், நீரா பானம் முற்றிலும் பாதிக்கப்படுகிறது. எனவே, விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, விமான நிலைய விரிவாக்கத்திற்காக அகற்றப்படும் தென்னை மரங்களுக்கு அதிகபட்ச இழப்பீடு வழங்க வேண்டும், இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இருகூர், காளப்பட்டி உள்ளிட்ட விமான நிலைய விரிவாக்கத்திற்குட்படுத்தப்படும் பகுதிகளில் சுமார் 3,000 தென்னை மரங்கள் இருக்கின்றன. எனவே, இது தொடர்பாக, மாவட்ட ஆட்சியர் வரும் செவ்வாய்கிழமை விவசாயிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

Newsletter

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...

அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் உயர்ந்துள்ளது. ஜூலை 2ஆம...

கோவை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் ஜூலை 2ம் தேதி நிலவரப்படி வெளியாகியுள்ளது. மழைப்பொ...

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...