கோவையில் சங்க தேர்தல் வேட்பாளராக தமிழக ஆளுநரை சேர்த்த கூட்டுறவு கடன் சங்கம்

கோவை : நாளை நடைபெற உள்ள கூட்டுறவு சங்கத் தேர்தலில் வாக்காளர் பட்டியலில் தமிழக ஆளுநர் பெயரை சேர்த்த காளப்பட்டி கூட்டுறவு கடன் சங்கத்தினரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கோவை : நாளை நடைபெற உள்ள கூட்டுறவு சங்கத் தேர்தலில் வாக்காளர் பட்டியலில் தமிழக ஆளுநர் பெயரை சேர்த்த காளப்பட்டி கூட்டுறவு கடன் சங்கத்தினரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

காளபட்டி நகர கூட்டுறவு கடன் சங்கத்தின்(கே1691) நிர்வாகிகளுக்கான தேர்தல் நாளை நடைபெற இருக்கிறது. இதில் கூட்டுறவு சங்கத்தில் 11 உறுப்பினர்களுக்கான தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இத்தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. அதில் 119 வரிசை எண்ணில் பெயர் இருக்க வேண்டிய இடத்தில் 'ஆளுநர், தமிழ்நாடு அரசு' எனவும், தந்தை பெயர் என்ற இடத்தில், 'கவர்மெண்ட்' என்றும், முகவரியில் 'தமிழ்நாடு' என்றும் அச்சிடப்பட்டிருந்தது.

கோவை முழுவதும் 250-க்கும் மேற்பட்ட கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் 80 சதவீதமான கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடைபெறாமலே நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் 27-க்கும் மேற்பட்ட கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் சட்டம் ஒழுங்கு பிரச்சனை காரணமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

தேர்தலில் வெற்றி பெற பல்வேறு மோசடிகளை ஆளுங்கட்சியினர் செய்து வரும் நிலையில் காளப்பட்டி நகரக் கூட்டுறவு கடன் சங்கத்தின் சார்பாக நடைபெறும் தேர்தலில் தமிழக ஆளுநரை உறுப்பினராக சேர்த்து விட்டு அவரது தந்தை பெயர் கவர்மெண்ட் என குறிப்பிட்டிருந்தது உறுப்பினர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...