பல்கலைக்கழக விரிவாக்கம் : நில ஆக்கிரமிப்பிற்கு இழப்பீடு தராமல் காலம் தாழ்த்துவதாக புகார்

கோவை: கோவை பாரதியார் பல்கலைக்கழக விரிவாக்கத்திற்காக ஆக்கிரமிப்பு செய்த நிலத்திற்கான பணத்தை கடந்த 35 ஆண்டுகளாகக் கொடுக்காமல் தாமதிப்பதாக நிலம் கொடுத்தவர்கள் புகார் மனு அளித்துள்ளனர்.

கோவை: கோவை பாரதியார் பல்கலைக்கழக விரிவாக்கத்திற்காக ஆக்கிரமிப்பு செய்த நிலத்திற்கான பணத்தை கடந்த 35 ஆண்டுகளாகக் கொடுக்காமல் தாமதிப்பதாக நிலம் கொடுத்தவர்கள் புகார் மனு அளித்துள்ளனர்.

இது தொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தவர்கள் கூறுகையில், "கடந்த 1980ம் ஆண்டில் பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு 5 ஊர்களை உள்ளடக்கிய பொதுமக்கள் 1,300 ஏக்கர் நிலம் கொடுத்துள்ளோம். ஒரு ஏக்கருக்கு அப்போதைய சந்தை விலை 8,000 என நிர்ணயிக்கப்பட்டது. குறைவாக இருப்பதின் காரணமாக நிலம் கொடுத்தவர்கள் இரண்டாண்டுகளுக்குப் பிறகு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதனை விசாரித்து நீதிமன்றம் 1.9.12-ல் நில உரிமையாளர்களுக்கு ஏக்கருக்கு ரூ. 4 லட்சம் வழங்க உத்தரவிட்டது. இதில் பலருக்கு முதல் தவணை பணம் வழங்கப்படவில்லை. 

நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும், தற்போது வரை நில உரிமையாளர்களுக்கு வழங்க வேண்டிய பணத்தை கொடுக்காமல் பாரதியார் பல்கலைக்கழக நிர்வாகம் புறக்கணிக்கிறது. இதனால், தங்கள் குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. உடனடியாக தங்களுக்கு சேர வேண்டிய பணத்தை பெற்றுத் தர வேண்டும். இவ்வாறு அவர்கள் கோரிக்கை வைத்தனர். 

Newsletter

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...

அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் உயர்ந்துள்ளது. ஜூலை 2ஆம...

கோவை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் ஜூலை 2ம் தேதி நிலவரப்படி வெளியாகியுள்ளது. மழைப்பொ...

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...