வண்டலூரில் இருந்த ‘கிரி’ ஆண் யானை முதுமலைக்கு ‘டிரான்ஸ்பர்’

நீலகிரி: சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் இருந்து ‘கிரி’ என்ற ஆண் யானை முதுமலையில் உள்ள தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

நீலகிரி: சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் இருந்து ‘கிரி’ என்ற ஆண் யானை முதுமலையில் உள்ள தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. 



நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாம் அமைந்துள்ளது. இம்முகாமில் வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இவை வனத்துறை ரோந்து பணிகளுக்காகவும், வனங்களை வீட்டு வெளியேறும் காட்டு யானைகளை விரட்டுதல் மற்றும் பிடித்தல் போன்ற கும்கி பணிகளுக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. 

மேலும், தெப்பக்காடு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் பொருட்டு யானை சவாரிக்கு பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில், கோவை மாவட்டம் சாடிவயல் முகாமில் இருந்த பாரி மற்றும் விஜய் ஆகிய கும்கி யானைகளுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. இதில் பாரி டாப்சிலிப்பில் உள்ள யானைகள் முகாமிற்கும், விஜய் தெப்பக்காடு முகாமிற்கும் இடமாற்றம் செய்யப்பட்டன. இதற்கு பதிலாக காட்டு யானை விரட்டும் பணிகளுக்காக தெப்பகாடு வளர்ப்பு யானைகள் முகாமில் பராமரிக்கப்பட்டு வந்த ஜான், சேரன் ஆகிய இரண்டு யானைகள் கடந்த 3-ம் தேதியன்று சாடிவயல் முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

தற்போது தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் ஒரு குட்டி யானை உட்பட 22 யானைகள் உள்ளன. இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டம், ஜவல்கிரி வனத்தில் தாயை பிரிந்த நிலையில் சுற்றி திரிந்த ஆண் யானை குட்டி கடந்த 2010-ம் ஆண்டு வனத்துறையினரால் மீட்கப்பட்டது. இந்த யானை சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு கொண்டு செல்லப்பட்டு கிரி என பெயரிடப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தது. 

தற்போது இதற்கு 9 வயதாகிறது. கும்கியாக மாற்ற பயிற்சி அளிப்பதற்கான வசதிகள் வண்டலூரில் இல்லாததால், இந்த யானையை முதுமலைக்கு இட மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து, சென்னை வண்டலூர் பூங்காவில் இருந்து லாரி மூலம் முதுமலைக்கு அழைத்து வரப்பட்டது. அதன் உடல் எடை சரிபார்க்கப்பட்டு, பின்னர் மாயாற்றில் குளிப்பாட்டப்பட்டது. பின்னர், தெப்பகாட்டில் உள்ள பாம்பேக்ஸ் முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டது. கிரியின் வருகையைத் தொடர்ந்து தெப்பக்காடு முகாமில் வளர்ப்பு யானைகளின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...