பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நாளை ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டி : ரசிகர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிப்பு

சென்னை : சென்னையில் நாளை நடைபெறும் ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டிக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால், சேப்பாக்கம் மைதானத்தில் நுழைய ரசிகர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

சென்னை : சென்னையில் நாளை நடைபெறும் ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டிக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால், சேப்பாக்கம் மைதானத்தில் நுழைய ரசிகர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் பல்வேறு கட்சிகளின் போராட்டம் தீவிரமடைந்துள்ளன. மேலும், தமிழகத்தில் ஐ.பி.எல். போட்டிகளை நடத்தவும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. எதிர்ப்பை மீறி போட்டியை நடத்தினால் மைதானத்திற்குள் நுழைந்து ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாகக் கூறியுள்ளனர். மேலும், காவிரி மேலாண்மை வாரியத்தை வலியுறுத்தி ஐ.பி.எல்., போட்டிகளில் சென்னை அணியின் வீரர்கள் கருப்பு பேட்ச் அணிந்து விளையாட வேண்டும் எனவும் ஒருதரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். கடும் எதிர்ப்புகள் கிளம்பியதால், நாளை சேப்பாக்கத்தில் சென்னை அணிக்கான போட்டி நடைபெறுமா..? என சந்தேகம் ஏற்பட்டது. இதனிடையே, திட்டமிட்டபடி, சென்னையில் நாளை ஐ.பி.எல்., போட்டி நடக்கும் என தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.

இந்நிலையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதில், தேசியக்கொடியை அவமதிக்கும் வகையில் யாரும் செயல்படக்கூடாது. இசைக்கருவிகள், கார் சாவிகள், பைனாகுலர், பட்டாசுகள், கேமராக்கள், குடிநீர் பாட்டில்கள், பேனர்கள், கொடிகள், பதாகைகளை, மொபைல் ஃபோன்கள், எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் உள்ளிட்டவைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், கறுப்பு சட்டை அணிந்து வரும் ரசிகர்களுக்கு சென்னை ஐ.பி.எல்., போட்டியைக் காண அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மைதானத்தில் ஏராளமான ரகசிய கேமிராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.

நாளை (ஏப்.,10) நடைபெறவுள்ள இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பலப்பரீட்சை நடத்துகிறது. இதற்காக இரு அணி வீரர்களும் சென்னை வந்தடைந்துள்ளனர். மேலும், மைதானம் மற்றும் வீரர்களின் பாதுகாப்பு கருதி 5,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Newsletter

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...