கோவை வீல் சேர் கூடைப்பந்து அணிக்காக மினி மாரத்தான்

சிற்றுளி அறக்கட்டளை சார்பில் கோவை வீல் சேர் கூடைப்பந்து அணி தொடங்கப்பட்டது. இந்த அணிக்கான நிதி திரட்டுவதற்கு மினி மாரத்தான் போட்டி வரும் மே மாதம் 6-ம் தேதி நடைபெற உள்ளது.


கோவை: சிற்றுளி அறக்கட்டளை சார்பில் கோவை வீல் சேர் கூடைப்பந்து அணி தொடங்கப்பட்டது. இந்த அணிக்கான நிதி திரட்டுவதற்கு மினி மாரத்தான் போட்டி வரும் மே மாதம் 6-ம் தேதி நடைபெற உள்ளது. 



கே.ஜி. கல்லூரி மைதானத்தில் நடைபெற இருக்கும் இந்த மாரத்தான் போட்டிக்காக முன்பதிவு வரும் 20-ம் தேதி வரை நடை பெறுகிறது.



இது குறித்து சிற்றுளி அமைப்பின் நிறுவனர் குணசேகரன் கூறுகையில், "மாற்றுத் திறனாளிகளுக்கான நிதியைத் திரட்டும் நோக்கில் இந்த மாரத்தான் நடைபெற உள்ளது. அந்த அணியில் 18 பேர் உள்ளனர். அவர்கள் சாதாரண வில் சேரை பயன்படுத்தியே பயிற்சி பெற்று வருகின்றனர். ஆனால், விளையாடுவதற்கு உகந்த வீல் சேர் வாங்குவதற்கு ரூ.60 ஆயிரம் வரை செலவாகிறது. அதற்காகவே இந்த போட்டி நடத்தப்படுகிறது.  



இந்த மாரத்தான் போட்டி ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு என மூன்று  பிரிவாக நடத்தப்படுகிறது. இந்த மாரத்தான் போட்டியில் கலந்து கொள்வதற்கான முன்பதிவை www.sittruli.org  என்ற இணையதள முகவரியின் வாயிலாகவும், சென்னை மொபைல்ஸ் கடைகளிலும் செய்து கொள்ளலாம்." என்றார்.    

Newsletter

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...