கால்நடைகளுக்கு அடையாளக் குறியீடு வழங்குவதற்கான முகாம்

நீலகிரி : உதகை நகரில் சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளுக்கு அடையாள குறியீடு வழங்கும் முகாம் வரும் 17-ம் தேதி நடக்கிறது.

நீலகிரி : உதகை நகரில் சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளுக்கு அடையாள குறியீடு வழங்கும் முகாம் வரும் 17-ம் தேதி நடக்கிறது.

மலை மாவட்டமான நீலகிரி மாவட்டம் சர்வதேச சுற்றுலா நகரமான உதகைக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் பெரும்பாலானோர் தங்களது சொந்த வாகனங்களில் வந்து சுற்றுலா தலங்களைக் கண்டு ரசித்து செல்கின்றனர். நகரில் உள்ள சாலைகள் மிக குறுகலானது என்பதால் வாகனப் போக்குவரத்து நெரிசல் அதிகளவு காணப்படும். அவ்வப்போது, வீடுகளில் வளர்க்கப்படும் மாடு, ஆடுகள், குதிரைகள் போன்ற கால்நடைகள் உதகை நகரில் உள்ள சாலைகளில் சுற்றித் திரிந்து வருகின்றன. அதுமட்டுமின்றி, சாலைகளின் நடுவே நின்று கொண்டும், படுத்து கொண்டும் இருப்பதால் வாகன ஒட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

மேலும், நகராட்சி நிர்வாகம் சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு அவ்வப்போது அபராதம் விதித்தாலும், கால்நடைகள் சாலைகளில் சுற்றி திரிவது தொடர் கதையாகவே உள்ளது.

தற்போது கோடை சீசன் துவங்கியுள்ள நிலையில், உதகை நகரில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், கால்நடைகள் சாலைகளில் உலா வருவதைத் தடுக்க மாவட்ட காவல்துறையால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக, வரும் 17-ம் தேதி காந்தள் முக்கோணம் பகுதியில் உள்ளூர் மக்கள் வளர்க்கும் குதிரை, மாடு போன்ற பிராணிகளுக்கு அடையாள குறியீடு வழங்கும் முகாம் நடைபெறவுள்ளது. இந்த முகாமில் கலந்து கொண்டு, அடையாள குறியீட்டைப் பெற்றுக் கொள்ளுமாறு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் முரளி ரம்பா அறிவித்துள்ளார். மேலும், அடையாள குறியீடு வாங்காத கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதோடு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Newsletter

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...