தடாகம் பகுதியில் புதிய காவல்நிலையத்தை திறந்து வைத்தார் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி

கோவை : கோவை மாவட்டம் தடாகம் பகுதியில் புதிய காவல் நிலையத்தை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்தார்.

கோவை : கோவை மாவட்டம் தடாகம் பகுதியில் புதிய காவல் நிலையத்தை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்தார். 



குற்றங்களை தடுக்கும் பொருட்டு, மாவட்டத்தில் காவல்நிலையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, தடாகம் பகுதியில் புதிய காவல்நிலையம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி, புணரமைக்கப்பட்ட காவல்நிலையம் தொடங்கப்பட்டது. தற்போது, இந்த புதிய காவல்நிலையம் 34-வது காவல் நிலையமாக திறக்கப்பட்டுள்ளது. இதனை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி திறந்து வைத்தார். மாவட்டத்தில் ஏற்கனவே, 33 காவல்நிலையங்கள் மற்றும் 3 மகளிர் காவல்நிலையங்கள் உள்ளன. 

தடாகம், சின்ன தடாகம், வீரபாண்டி, பன்னிமடை ஆகிய நான்கு கிராமங்கள் இந்த காவல் நிலையத்தின் கட்டுப்பட்டிற்குள் வருகின்றன. இரண்டு உதவி ஆய்வாளர், இரண்டு சிறப்பு உதவி ஆய்வாளர், தலைமைக் காவலர்கள் 9 பேர் மற்றும் காவலர்கள் 2 பேருடன் இந்த காவல்நிலையம் திறக்கப்பட்டுள்ளது. நேற்று மதியம் திறக்கப்பட வேண்டிய இந்த காவல்நிலையம், தடாகம் பகுதியில் பெய்த கனமழை காரணமாக மாலை 3.30 மணியளவில் திறக்கப்பட்டது. 

"மலைவாழ் மற்றும் கிராமமக்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளின் போது துடியலூர் காவல்நிலையத்தை நாடிச் செல்ல வேண்டி இருந்தது. தற்போது, இந்த காவல்நிலையம் மக்களுக்கு பயனுள்ள வகையில் அமையும்" என்று போலீசார் தெரிவித்தனர். 

புதிய காவல்நிலையம் திறப்பு விழாவில், மேற்கு மண்டல ஐ.ஜி. பாரி, மாநகர காவல்துறை ஆணையர் பெரியய்யா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மூர்த்தி, அரசு அதிகாரிகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...