வன்கொடுமை தடுப்பு சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு : ரயில்மறியலில் ஈடுபட்ட 150-க்கும் மேற்பட்டோர் கைது

கோவை : வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் திருத்தம் செய்ததைக் கண்டித்து, கோவையில் ரயில்மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்டோர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

கோவை : வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் திருத்தம் செய்ததைக் கண்டித்து, கோவையில் ரயில்மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்டோர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். 

அண்மையில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் திருத்தம் செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு ஒன்றை வெளியிட்டிருந்தது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனைக் கண்டித்து பலகட்ட போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், கோவையில் 10-க்கும் மேற்பட்ட அமைப்புகள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் திருத்தம் செய்ததைக் கண்டித்து ரயில்மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

முன்னதாக, தந்தை பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் விடுதலை கழகம், தமிழ் புலிகள் உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்டோர் ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், மேட்டுப்பாளையத்திலிருந்து கோவை வந்தடைந்த பயணிகள் ரயிலில் வந்த தமிழ் புலிகள் அமைப்பைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் ரயிலை மறித்து ஆர்ப்பாட்டம் நடத்தின். அப்போது, மத்திய அரசுக்கு எதிராகவும், அரசியல் அமைப்பு சட்டத்தின் 9-ல் திருத்தம் செய்ய வலியுறுத்தி கண்டன கோஷங்களையும் எழுப்பினர். மேலும், ரயில் எஞ்சின் மீது ஏறி அவர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, மறியலில் ஈடுபட்ட 150-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...