டி.என்.பி.எஸ்.சி.யில் தேர்வானவர்களுக்கு ஓர் எளிய முறை அறிமுகம்

குரூப் தேர்வுகளில் வெற்றி பெற்றவர்கள் தங்களது அசல் சான்றிதழ்களை அரசு இ-சேவை மையங்களில் ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்து கொள்ளும் முறையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிமுகம் செய்துள்ளது.


குரூப் தேர்வுகளில் வெற்றி பெற்றவர்கள் தங்களது அசல் சான்றிதழ்களை அரசு இ-சேவை மையங்களில் ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்து கொள்ளும் முறையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிமுகம் செய்துள்ளது. 

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படுகின்ற தேர்வுகளின் மூலம் தேர்வு செய்யப்படும் தேர்வர்கள் சான்றிதழ் சரிபார்ப்பிற்கும், கலந்தாய்விற்கும் என இரண்டு முறை சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்திற்கு நேரடியாக செல்ல வேண்டியுள்ளது. இந்த நடைமுறையினால் தேர்வர்களுக்கு ஏற்படும் போக்குவரத்து செலவினம், கால விரையம் உள்ளிட்ட அசௌகரியங்களை கருத்தில் கொண்டு, அசல் சான்றிதழ்களை சரிபார்ப்பு பணியினை எளிமைப்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தேர்வர்கள் தங்களுடைய விண்ணப்பத்தில் தெரிவித்துள்ள கல்வித்தகுதிக்கான அனைத்து அசல் சான்றிதழ்களையும் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் மூலம் நடத்தப்படுகின்ற அரசு இ-சேவை மையங்களில் அசல் சான்றிதழ்களை பக்கத்திற்கு ரூ. 5 (ஐந்து ரூபாய் மட்டும்), வீதம் செலுத்தி ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்து ஒப்புகை சீட்டு பெற்றுக்கொள்ளலாம். மேற்கண்ட நடைமுறையானது கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வருவாய் வட்டங்கள் மற்றும் மாவட்ட தலைநகரில் உள்ள அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் மூலம் நடத்தப்படும் அனைத்து அரசு இ-சேவை மையங்களிலும் வரும் 23-ம் தேதி முதல் செயல்படுத்தப்பட இருக்கிறது. 

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...