கோவையில் சேற்றை முகத்தில் பூசி புவி தினம் கொண்டாடிய தன்னார்வலர்கள்

கோவை: கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த தன்னார்வலர்கள் இன்று சேற்றை முகத்தில் பூசி புவி தினத்தை கொண்டாடி மகிழ்ந்தனர்.

கோவை: கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த தன்னார்வலர்கள் இன்று சேற்றை முகத்தில் பூசி புவி தினத்தை கொண்டாடி மகிழ்ந்தனர்.

இன்று புவி தினம் கடைபிடிக்கப்படுவதையொட்டி கோவையில் பல்வேறு தன்னார்வ அமைப்புகள் புவியை பாதுகாக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த தன்னார்வலர்கள் பொதுமக்களுக்கு இன்று துளசி செடிகள் வழங்கும் நிகழ்ச்சியை நடத்தினர்.



உக்கடம் பெரிய குளத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, எம்.எல்.ஏ அம்மன் அர்ஜுனன் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு துளசிச் செடிகளை வழங்கினர்.



இதனைத் தொடர்ந்து, புவி தினத்தை சிறப்பாக கொண்டாடும் விதமாக, புவிக்கும் தங்களுக்கும் இருக்கும் தொடர்பினை உணர்த்தும் வகையில் தன்னார்வலர்கள் தங்களது முகங்களில் சேற்றினை பூசிக்கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் 75-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.



Newsletter

கோவை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் ஜூலை 2ம் தேதி நிலவரப்படி வெளியாகியுள்ளது. மழைப்பொ...

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....