மது போதையில் போலீசாரை தாக்கிய திருப்பூர் வாலிபர்கள் கைது

திருப்பூர் : திருப்பூரில் ரோந்து சென்ற காவல் உதவி ஆய்வாளரைத் தாக்கிய 10 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர் : திருப்பூரில் ரோந்து சென்ற காவல் உதவி ஆய்வாளரைத் தாக்கிய 10 பேரை போலீசார் கைது செய்தனர். 

திருப்பூர் மத்திய காவல் நிலையத்தில் உதவி காவல் ஆய்வாளராக இருப்பவர் அண்ணாதுரை. இவர் நேற்று காலை வழக்கம் போல செல்லம் நகர் பகுதிகளில் ரோந்து சென்றார். அங்குள்ள டாஸ்மாக் கடை அருகே காலை வேளையில் மது அருந்தி பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த குடி மகன்களை அவரவர் வீட்டிற்குச் செல்ல வலியுறுத்தினார். 

இதனால் அங்கிருந்த வாலிபர்கள் ஆத்திரமடைந்து காவல் உதவி ஆய்வாளரைத் தாக்கியுள்ளனர். இதில் அண்ணாதுரைக்கு கை முறிவு ஏற்பட்டது. 

இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு செல்லம் நகர் பகுதியை சேர்ந்த பாக்கியராஜ் , கருப்பையா உள்ளிட்ட 10 பேரைக் கைது செய்தனர். மேலும், தலைமறைவான இருவரைத் தேடி வருகின்றனர். 

Newsletter

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...