கார்களில் பாதுகாப்பு பதிவு எண் பலகைகள் பொருத்த முடிவு : சாலை போக்குவரத்து துறை அமைச்சகம் தகவல்

டெல்லி : அடுத்த ஆண்டில் இருந்து விற்பனைக்கு வரும் கார்களில், உயர் பாதுகாப்பு பதிவு எண் பலகைகள் பொருத்த முடிவு செய்திருப்பதாக மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

டெல்லி : அடுத்த ஆண்டில் இருந்து விற்பனைக்கு வரும் கார்களில், உயர் பாதுகாப்பு பதிவு எண் பலகைகள் பொருத்த முடிவு செய்திருப்பதாக மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கார்களில் பொருத்தப்பட்டு இருக்கும் பதிவு எண் பலகைகளை, உயர் பாதுகாப்பு தொழில்நுட்பத்துடன் வடிவமைக்க, மத்திய அரசு முடிவு செய்தது. இதற்கான பணிகள், 10 ஆண்டுகளாக நடைபெற்று வந்தன. இந்நிலையில், அந்த பணிகள் முடிவடைந்து, அடுத்தாண்டு, ஜனவரியிலிருந்து விற்பனைக்கு வரும் கார்களில், உயர் பாதுகாப்பு பதிவு எண் பலகைகள் பொருத்தப்பட உள்ளதாக, அரசு தெரிவித்துள்ளது.

இதுவரை, கார் பதிவு எண் பலகைகளை, அந்தந்த மாநில அரசுகளே வாங்கி, வாகனப் பதிவின்போது பொருத்தி வந்தன. இனி, இந்த உயர் பாதுகாப்பு பதிவு எண் பலகைகள் கார் தயாரிப்பு நிறுவனங்களாலேயே பொருத்தப்பட்டு விற்பனை செய்யப்படும். இந்த புதிய பதிவு எண் பலகையின் விலை, கார் விலையுடன் சேர்க்கப்படும் என, மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

காரின் இன்ஜின் எண், 'சேசிஸ்' எண் போன்ற விபரங்களும் அதில் இருக்கும். கார் திருட்டு போன்ற சம்பவங்களின் போது, இவை பெரும் உதவியாக இருக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மத்திய மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்ட பின், இந்த பதிவு எண் பலகை மாற்றம் நடைமுறைப் படுத்தப்பட உள்ளது. 

இது தொடர்பாக வரும் மே 10-ம் தேதி வரை மக்கள் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்யலாம் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Newsletter

கோவை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் ஜூலை 2ம் தேதி நிலவரப்படி வெளியாகியுள்ளது. மழைப்பொ...

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....