நில அளவேடு, பதிவேடு துறையின் 160-வது தின கண்காட்சி தொடக்கம்

கோவை: கோவையில் நில அளவேடு, பதிவேடு துறையின் 160-வது தின கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன் இன்று தொடங்கி வைத்தார்.

கோவை: கோவையில் நில அளவேடு, பதிவேடு துறையின் 160-வது தின கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன் இன்று தொடங்கி வைத்தார்.

அரசு துறைகளில் பழமையான துறையாகக் கருதப்படும் நிலஅளவை பதிவேடு துறை கடந்த 1858-ம் ஆண்டு சென்னையில் தொடங்கப்பட்டது. இந்தாண்டோடு, இத்துறை 160 ஆண்டுகளை கடந்துள்ளதை குறிக்கும் வகையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனை மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன், வருவாய் அலுவலர் ரவிசந்தரன் ஆகியோர் தொடங்கி வைத்து பார்வையிட்டனர்.



நிலஅளவை துறையின் பிதாமகன் என போற்றப்படும் வில்லியம் லாம்டன், 1802-ம் ஆண்டு சென்னையில் புனித தோமையர் மலையில் நில அளவையைத் துவங்கிய நாளான ஏப்ரல் 10-ம் நாள் தேசிய நில அளவை தினமாக அனுசரிக்கப்படுகிறது. இதன் புகைபடங்கள் தற்போது உபயோகப்படுத்தும் முறை உள்ளிட்ட படங்கள் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தது.



அன்றைய சென்னை மாகாணத்தை உள்ளடக்கி இருந்த ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களை தலைமையிடமாகக் கொண்டு 1858-ம் ஆண்டு 18 நில அளவர்கள், 20 வரைவாளர்கள், 30 நிலஅளவை உதவியாளர்கள், 50 எழுத்தாளர்கள் கொண்டு துவங்கப்பட்ட நில அளவைத் துறை 160 ஆண்டுகளைக் கடந்துள்ளது. நில அளவைத் துறையின் ஆவணங்களை, தற்போது இணையதளம் மூலம் உலகில் எங்கிருந்து வேண்டுமானாலும் பார்க்கும் அளவிற்கு அறிவியல் தொழில்நுட்பம் மூலம் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...