கோவையில் உணவு பாதுகாப்பு துறை சார்ப்பில் பொதுமக்களுக்கான விழிப்புணர்வு கண்காட்சி

கோவை: உணவு பண்டங்கள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உணவுப் பாதுகாப்பு துறை சார்பில் இன்று விழிப்புணர்வு கண்காட்சி நடத்தப்பட்டது.

கோவை: உணவு பண்டங்கள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உணவுப் பாதுகாப்பு துறை சார்பில் இன்று விழிப்புணர்வு கண்காட்சி நடத்தப்பட்டது.

உணவு பாதுகாப்பு துறை சார்ப்பில் உணவு பண்டங்களில் கலப்படம் செய்யப்படும் பொருட்களை பொதுமக்கள் அறிந்து கொள்ளவும், அவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் கண்காட்சி அரங்கு அமைக்கப்பட்டிருந்தது.



மக்கள் குறை தீர்ப்பு நாளான இன்று அங்கு வந்த பொதுமக்களிடம் இது குறித்து விளக்கமளிக்கப்பட்டது.

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், "தற்போது சந்தையில் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்களில் கலப்படம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுவதால் அதை உண்பவர்களுக்கு நோய் அபாயம் ஏற்படுகிறது." என்றார்.

தொடர்ந்து, அங்கிருந்த பொதுமக்களிடம் கலப்பட பொருட்கள், கலப்படம் அல்லாத பொருட்களை கண்டறிவது குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. கடைகளில் விற்பனை செய்யப்படும் பொருட்களில் கலர் பொடிகள் உபயோகிக்கப்படும் போது எவ்வாறு நிறம் மாறி காணப்படும்? அசல் பொருட்களை எவ்வாறு கண்டறிவது? உணவு பண்டங்களின் தயாரிப்பு தேதி காலாவதி உள்ளிட்டவை கண்டறிவது குறித்து விளக்கமளிக்கப்பட்டது.



மாவட்ட அறிவியல் கழகம் சார்ப்பில் அமைக்கப்பட்டிருந்த புத்தகங்கள் கண்காட்சி மற்றும் விற்பனை மையமும் ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டிருந்தது. இதில், பல்வேறு வகையான புத்தங்கள் இடம் பெற்றிருந்தன. இந்தக் கண்காட்சியில் விற்பனை செய்யப்பட புத்தகங்களை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர்.



Newsletter

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...