சங் பரிவார் அமைப்புகளின் ஏஜெண்டாக செயல்படும் அ.தி.மு.க.,: கம்யூன்ஸ்ட் கட்சி விமர்சனம்

கோவை: தமிழகத்தில் சங் பரிவார் அமைப்புகளின் மூன்றாம் தர ஏஜெண்ட்டாக அ.தி.மு.க., செயல்படுவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சுதாகர் ரெட்டி விமர்சித்துள்ளார்.

கோவை: தமிழகத்தில் சங் பரிவார் அமைப்புகளின் மூன்றாம் தர ஏஜெண்ட்டாக அ.தி.மு.க., செயல்படுவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சுதாகர் ரெட்டி விமர்சித்துள்ளார். 

கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த போது அவர் பேசியதாவது :- கேரளாவில் நடைபெற உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டில், நாட்டில் நிலவும் வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு, தலித் மக்கள் மீதான தாக்குதல்கள் உள்ளிட்ட மத்திய அரசின் மக்கள் விரோத போக்குகள் குறித்து விவாதிக்கப்பட இருக்கிறது. பிரதமராக மோடி பொறுப்பேற்ற பின்னர் நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலை பல மடங்குஅதிகரித்துள்ளது. டீசல், பெட்ரோல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளது. பா.ஜ.க.,வும் அ.தி.மு.க.,வும் இணைந்து செயல்படுகின்றன. தமிழகத்தில் பா.ஜ.க.,வின் ஏஜெண்ட்டாக அ.தி.மு.க., செயல்படுகிறது. சங்க் பரிவார் அமைப்புகளின் மூன்றாம் தர ஏஜெண்ட்டாக அ.தி.மு.க., செயல்படுகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் பா.ஜ.க.,வை காப்பாற்றும் நோக்கில் 

நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க., செயல்பட்டது.

மேலும், பா.ஜ.க., தலைவர்கள் அறிவியல் பூர்வமற்ற கருத்துகளை மக்கள் மத்தியில் பேசி வருகின்றன. உச்சநீதிமன்ற நீதிபதியைப் பதவி நீக்கம் செய்யக் கோரிய எதிர்கட்சிகளின் தீர்மானத்தை குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு அவசரப்பட்டு நிராகரித்து விட்டார். இது, எதிர்பார்த்ததுதான். சட்டம் தெரிந்த அவரே, பரிந்துரை தொடர்பாக ஆலோசிக்க குழு அமைக்காமல் அவசரமாக முடிவு செய்துவிட்டார். தூக்கு தண்டனை வழங்க சட்டம் கொண்டு வந்ததின் மூலம் பாலியல் வன்கொடுமையுடன் சாட்சியங்களை மறைக்க பெண்கள் கொலை செய்யக்கூடும் என பெண்கள் நல அமைப்புகள் கருதுகின்றன. அரசு சட்டம் கொண்டு வரும் முன் பெண்கள் அமைப்புகளுடன் கலந்து ஆலோசித்து இருக்கலாம்.

தமிழக ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என்பது சி.பி.எம் நிலைப்பாடு மட்டுமல்ல. தமிழகத்தில் உள்ள பல்வேறு கட்சிகளின் நிலைப்பாடும் இது தான். பேராசிரியர் நிர்மலாதேவி விவகாரத்தில் சிக்கி உள்ள ஆளுநரை அரசு நிச்சயம் திரும்ப பெற்றுக்கொள்ள வேண்டும். கம்யூனிஸ்ட் இயக்கங்களுக்கு இடையேயான கருத்து வேறுபாடுகள் குறைந்து வருகிறது.

Newsletter

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...