கோவையில் தந்தையால் விற்க முயன்ற 3 மாதம் பெண் குழந்தை மீட்பு

கோவை: கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் அருகே தந்தையால் விற்க முயன்ற 3 மாதம் பெண் குழந்தையை சைல்ட் லைன் அதிகாரிகள் மீட்டு, காப்பகத்தில் ஒப்படைத்தனர்.


கோவை: கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் அருகே தந்தையால் விற்க முயன்ற 3 மாதம் பெண் குழந்தையை சைல்ட் லைன் அதிகாரிகள் மீட்டு, காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

கவுண்டம்பாளையம் குமரன் நகரில் வசித்து வரும் வட மாநிலத்தை சேர்ந்தவர் ஸ்சொன்னா. கூலித்தொழிலாளியான இவருக்கும், இவரது மனைவிக்கும் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர். இந்த நிலையில், 3 மாத குழந்தையை வளர்க்க முடியாததால், குழந்தையை விற்பனை செய்ய முயற்சித்துள்ளார். இந்த தகவல் அறிந்த அந்தப் பகுதியை சேர்ந்தவர்கள் 1098 என்ற இலவச எண்ணுக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் வந்த சைல்ட் லைன் அதிகாரிகள், ஸ்சொன்னாவிடம் பேசி குழந்தையை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் ஒப்படைத்தனர்.



இது குறித்து மாவட்ட சைல்ட் லைன் ஒருங்கிணைப்பாளர் உமாதேவி கூறியதாவது :- எங்களுக்கு நேற்று இரவு சுமார் 08.45 மணி அளவில் கவுண்டம்பாளையம் பகுதியில் தந்தையே குழந்தையை விற்க முயற்சி செய்வதாக 1098-க்கு புகார் வந்தது. அதனடிப்படையில், நாங்கள் உண்மை நிலை அறிந்து குழந்தையை மீட்டோம். பின்னர், கோவை அரசு மருத்துமனையில் சுமார் 12.30 மணியளவில் குழந்தையை நாங்கள் ஒப்படைத்தோம். இதில், குழந்தையைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை நலமாக இருப்பதாகத் தெரிவித்ததாக கூறினார், எனத் தெரிவித்தார்.

இது குறித்து கோவை அரசு மருத்துவமனையின் இருப்பிட மருத்துவர் அலுவலர் சௌந்திரவேல் கூறுகையில், "இந்தாண்டில் இந்தக் குழந்தை நான்காவதாக பெற்றோர்களால் புறக்கணிக்கப்பட்டு, கோவை அரசு மருத்துவமனைக்கு வந்துள்ளது. இதுபோன்று வரும் குழந்தைகளை அரவணைத்து பார்த்து, அதன் எடை, உடல்நலம் அனைத்தும் கவனித்து அரசின் குழந்தைகள் பாதுகாப்பு சரணாலயத்தில் விட்டு விடுவோம். அதேபோல, இந்த 3 மாத குழந்தைக்கு சௌந்தர்யா என பெயரிட்டுள்ளோம். இந்தக் குழந்தை நலமுடன் இருப்பதால் கிணத்துக்கடவில் உள்ள குழந்தைகளைப் பாதுகாக்கும் சரணாலயத்தில் அரசு அதிகாரிகளின் அறிவுறுத்தலின்படி ஒப்படைத்துள்ளோம்," என்றார்.

Newsletter

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...