உதகையில் பத்திரப்பதிவு செய்ய வழக்கறிஞரிடம் ரூ.6 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சார் பதிவாளர் கைது

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் பத்திரப்பதிவு செய்வதற்காக வழக்கறிஞரிடம் ரூ. 6 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சார் பதிவாளரை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர்.

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் பத்திரப்பதிவு செய்வதற்காக வழக்கறிஞரிடம் ரூ. 6 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சார் பதிவாளரை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர்.

உதகையில் பத்திரப் பதிவாளராக ரமேஷ் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், இன்று எடக்காடு பகுதியில் நிலப்பதிவு செய்ய வழக்கறிஞர் ரவிக்குமார் என்பவர் சென்றுள்ளார். அப்போது, நிலப்பதிவு செய்ய ரூ. 9 ஆயிரம் கேட்டுள்ளார். இதனையடுத்து அவர் என்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று கூறியுள்ளார். இதனையடுத்து, பத்திரப் பதிவாளர் ரூ. 8 ஆயிரம் தருமாறு கூறியுள்ளார். இதற்கு ஒப்புக் கொண்ட வழக்கறிஞர் ரவிக்குமார், இது தொடர்பாக லஞ்சம் ஒழிப்புத் துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார்.

இதையடுத்து, லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தலின் பேரில், ரசாயனம் தடவிய பணத்தை பத்திரப் பதிவாளர் ரமேஷிடம், வழக்கறிஞர் கொடுத்துள்ளார். இந்தப் பணத்தை பெற்றுக் கொள்ளும் போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் பத்திரப் பதிவாளரை கையும் களவுமாகப் பிடித்தனர். இதனையடுத்து, 2 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை மேற்கொண்டு அவரைக் கைது செய்தனர்.



Newsletter

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...