பிரதமரை கொலை செய்வதாக மிரட்டல் விடுத்தவர் கைது: கோவை மாநகர போலீஸ் நடவடிக்கை

கோவை: பிரதமர் நரேந்திர மோடியை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளதாக செல்போனில் பேசிய ரபீக் என்பவரை மாநகர போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை: பிரதமர் நரேந்திர மோடியை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளதாக செல்போனில் பேசிய ரபீக் என்பவரை மாநகர போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவையில் கடந்த 1998-ம் ஆண்டு குண்டு வெடிப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்டு சிறை தண்டனை பெற்றவர் ரபீக் (53).

வழக்கில் இருந்து விடுதலையான இவர் சேலத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவருடன் செல்போனில் உரையாடுவது போன்ற ஆடியோ சமீபத்தில் வெளியானது. அந்த ஆடியோவில், "பிரதமர் மோடியை கொலை செய்ய திட்டமிட்டுள்ளோம்" என்று பகிரங்க மிரட்டல் விடுத்தார்.

இது தொடர்பாக, குனியமுத்தூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், காவல் ஆய்வாளர் கணேஷ் தலைமையிலான போலீசார் ரபீக்-ஐ தேடி வந்தனர்.

இந்த நிலையில், இன்று மாலை அவரை கரும்புக்கடை பகுதியில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர்.

மேலும், தற்போது வெளியாகியுள்ள ஆடியோவில், தான் 160 வாகனங்களை அடித்து உடைத்ததாக ரபீக் கூறியுள்ள நிலையில், பொதுமக்கள் யாராவது ரபீக்கால் பாதிக்கப்பட்டிருந்தால் உடனடியாக புகார் அளிக்க போலீசார் அழைப்பு விடுத்துள்ளனர்.

ரபீக் மீது ஏற்கனவே (போக்கிரி) சரித்திரப் பதிவேடு தொடங்கியிருப்பதும், அவரை போலீசார் தொடர்ந்து கண்காணித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

Newsletter

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...

அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் உயர்ந்துள்ளது. ஜூலை 2ஆம...

கோவை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் ஜூலை 2ம் தேதி நிலவரப்படி வெளியாகியுள்ளது. மழைப்பொ...

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...