கோவையில் செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள், பட்டாணி பறிமுதல்

கோவை: கோவையில் செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் மற்றும் சாயம் ஏற்றப்பட்ட பச்சைப் பட்டாணி ஆகியவற்றை உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கோவை: கோவையில் செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் மற்றும் சாயம் ஏற்றப்பட்ட பச்சைப் பட்டாணி ஆகியவற்றை உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அவ்வப்போது மாநகரில் உள்ள கடைகளில் அதிரடி ஆய்வு நடத்தி வருகின்றனர்.



அதன்படி, கடந்த வாரம் தாமஸ் வீதியில் உள்ள ஒரு குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பல லட்சம் மதிப்பிலன தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

இந்த நிலையில், தமிழ்நாடு உணவு பாதுகாப்புத் துறை ஆணையர் உத்தரவின் பேரில், மாநகரில் உள்ள வணிக வளாகங்கள், பழக்கடைகள், குளிர்பானக் கடைகள் மற்றும் குடோன்களில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் மற்றும் சாயம் ஏற்றப்பட்ட பட்டாணி ஆகியவை விற்பனைக்கு வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து, சுமார் 25 கிலோ பச்சைப் பட்டாணி, 70 கிலோ மாம்பழங்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவற்றை அழித்தனர்.



உணவு பாதுகாப்புத் துறை சார்பில் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்காட்சி நடத்தப்பட்டதும், அதில் கலப்பட உணவுகளை கண்டறிதல் குறித்த செய்முறை விளக்கமளித்ததும் குறிப்பிடத்தக்கது.



Newsletter

கோவை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் ஜூலை 2ம் தேதி நிலவரப்படி வெளியாகியுள்ளது. மழைப்பொ...

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....