நீலகிரி தோடர் மக்களின் 'எம்ராய்டரிக்கு' புவியியல் குறியீடு

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் தோடர், கோத்தர், பனியர், குரும்பர், காட்டுநாயக்கர், இருளர் ஆகிய ஆதிவாசி பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இதில் ஒவ்வொரு ஆதிவாசி இனமக்களும் தங்களுக்கு என தனி பாரம்பரிய உடை, இருப்பிடம், பழக்கவழக்கங்களைக் கொண்டுள்ளனர்.

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் தோடர், கோத்தர், பனியர், குரும்பர், காட்டுநாயக்கர், இருளர் ஆகிய ஆதிவாசி பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இதில் ஒவ்வொரு ஆதிவாசி இனமக்களும் தங்களுக்கு என தனி பாரம்பரிய உடை, இருப்பிடம், பழக்கவழக்கங்களைக் கொண்டுள்ளனர்.

குறிப்பாக தோடர் இன மக்கள் பாரம்பரிய 'எம்ராய்டரி' (பூ வேலைப்பாடு) மேற்கொள்வதில் வல்லவர்கள்.



இவர்கள் பாரம்பரியமாக உடுத்தும் ஆடை 'பூத்துக்குளி' விழா காலங்களிலும், இறுதி சடங்குகளிலும் தோடரின மக்கள் இந்த பாரம்பரிய ஆடையை உடுத்திக் கொண்டு தான் பங்கேற்க வேண்டும். பருத்தியாலான இந்த வெண்ணிற ஆடையில் சிவப்பு மற்றும் கருப்பு நிற நூலால், உடலில் பச்சை குத்துவது போல அதே வடிவமைப்பில் பூ வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருப்பது இதன் தனி சிறப்பு. பூ வேலைப்பாடுகள் கையால் மட்டுமே செய்யப்படுவதால் இதன் விலை அதிகம்.

இந்த பூ வேலைப்பாடுகளால் கவரப்பட்டு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் இந்த ஆடைகளை ஆர்வமாக வாங்கி செல்கின்றனர். அதே நேரத்தில் இந்த ஆடை விலை அதிகமாக உள்ளதால் வர்த்தக ரீதியாக பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதனால் தற்போது பூ வேலைப்பாடுகள் அடங்கிய பிற பொருட்களைத் தயாரிக்க தொடங்கியுள்ளனர். தலையணை உறைகள், செல்போன் உறைகள், அலங்கார விரிப்புகள் என இவர்களது படைப்புகள் விரிவடைந்துள்ளன. 



இந்நிலையில் இவர்களின் பாரம்பரிய பூ வேலைப்பாடுகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் தோடர் பழங்குடியின பெண்கள் மேற்கொள்ளப்படும் பாரம்பரிய ‘தோடர் எம்ராய்டரி’ க்கும் (பூ வேலைப்பாடு) புவியியல் குறியீடு கிடைத்துள்ளது. இதற்காக கடந்த 2008-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் தோடர் நலவாழ்வு சங்கம், கீ ஸ்டோன் நிறுவனம் ஆகியவை இணைந்து தோடர் இன பெண்களின் பாரம்பரிய பூ வேலைப்பாட்டிற்கு (எம்ராய்டரி) புவியியல் குறியீடு பெற சென்னையில் உள்ள புவியியல் குறியீட்டு பதிவகத்திற்கு விண்ணப்பிக்கப்பட்டது. 

இதற்கான முக்கிய நோக்கம் தோடர் இன பெண்களின் கலாச்சாரத்தை இன்றளவும் பிரதிபலிக்கும் பாரம்பரிய பூ வேலைப்பாட்டை புவியியல் குறியீடு மூலம் பாதுகாப்பதுடன் இந்த கலையை மேலும் வளர்ச்சி பெறவும் இந்த கலையை செய்து வரும் பெண்களுக்கு உரிய வருமானம் கிடைக்கவும் வழிவகை செய்வதாகும். 

இந்த புவியியல் குறியீட்டைப் பெற்றதன் மூலம் உலகிலேயே நீலகிரியில் வசிக்கும் தோடர் இன பெண்கள் செய்து வரும் பூ வேலைப்பாடு உலகில் வேறெங்கும் தயாரிக்கப்படுவதில்லை என உறுதியளிக்க முடியும். இந்த அறிய வகை கலைக்கு உலகளவில் ஒரு வியாபார உக்தியாக வைத்து விற்பனையை அதிகரிப்பதுடன் இக்கலையை விரும்பும் வாடிக்கையாளர்கள் இதன் தனித்தன்மையை உணர்ந்து அதற்கு உரிய விலை தர வழி வகை செய்யும்.



Newsletter

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...