திருப்பூரில் 'தானா சேர்ந்த கூட்டம்' பட பாணியில் ரூ.4 லட்சம் கொள்ளை

திருப்பூர்: திருப்பூரில் வருமான வரித்துறை அதிகாரிகளைப் போல நடித்து 30 சவரன் நகை மற்றும் ரூ. 4 லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருப்பூர்: திருப்பூரில் வருமான வரித்துறை அதிகாரிகளைப் போல நடித்து 30 சவரன் நகை மற்றும் ரூ. 4 லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

திருப்பூரை அடுத்த பூலுவபட்டி பழனிசாமி நகர் 3-வது வீதியைச் சேர்ந்தவர் சிவக்குமார் (45). இவரது, மனைவி சாந்தமணி (40). இவர்களுக்கு ஸ்ரீராம் (13), பவதாரணி (10) என்ற மகனும், மகளும் உள்ளனர். தனியார் பனியன் நிறுவனம் நடத்தி வரும் சிவக்குமார், கார் மற்றும் இடம் வாங்கி, விற்பனை செய்யும் தொழிலை செய்து வந்தார். இந்நிலையில், இன்று காலை வழக்கம் போல சிவக்குமார் பனியன் நிறுவனத்துக்கு சென்று விட்டார். இதனால், வீட்டில் அவரது மனைவி சாந்தமணி மற்றும் இரண்டு குழந்தைகளும் இருந்தனர்.



இதனிடையே, இன்று மதியம் வீட்டு முன்பு காரில் வந்த ஐந்து பேர் வேகமாக, கீழே இறங்கி வீட்டுக்குள் சென்று சிவக்குமார் இருக்கிறாரா என்று கேட்டனர். பின்னர், தங்களை வருமானவரித்துறை அதிகாரிகள் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு, வீட்டில் சோதனையிட வேண்டும் என்றும், வீட்டுக்குள் வாருங்கள் என்று சாந்தமணியை அழைத்தார். சிலர் அறைக்குள் சென்று பீரோவில் நகை, பணம் ஆகியவற்றை எடுத்து வந்து டேபிள் மீது வைத்தனர். மற்றொருவர் வீட்டுக்குள் இருக்கும் மூன்று சி.சி.டி.வி., கேமராவின் பேக்கேஜ் எங்க இருக்கிறது என்று கேட்டார். பின்னர், மாடிக்கு விரைந்து சென்ற அந்த நபர் மாடியில் இருந்த அறையில், சி.சி.டி.வி., கேமராவின் ஹார்டு டிஸ்கை கைப்பற்றினர். 

அரைமணி நேரம் வரை விசாரித்து விட்டு, நகை, பணத்தை எடுத்து செல்கிறோம். கோவையில் உள்ள அலுவலகத்துக்கு வந்து, கையெழுத்து போட்டு நகை, பணத்தைப் பெற்று செல்லுங்கள் என்று கூறிவிட்டு, வேகமாக வீட்டை விட்டு அவர்கள் வெளியேறினர். இதையடுத்து, கணவருக்கு தகவல் அளித்தார். வீட்டுக்கு சிவக்குமார் விரைந்து வந்து விசாரித்தார். அதில், வீட்டுக்கு வந்து சென்ற நபர்கள், போலி வருமான வரித்துறை அதிகாரிகள் என்பது தெரிய வந்தது.

இதுகுறித்து அவர்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்கு திருப்பூர் மாநகர போலீஸ் துணை ஆணையர் பிரபாகரன், போலீஸ் உதவி ஆணையர் அண்ணாதுரை, அனுப்பர்பாளையம் இன்ஸ்பெக்டர் ராஜன் பாபு ஆகியோர் விரைந்து சென்று விசாரித்தனர். அதில், 30 சவரன் தங்க நகை, ரூ. 4 லட்சம் ரொக்கம் என்பது தெரியவந்தது. தொடர்ந்து, தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, வீட்டுக்குள் இருந்த கைரேகைகளை போலீசார் கைப்பற்றினர். சினிமா பட பாணியில் அதிகாரிகள் என்று கூறி பட்டப்பகலில் வீட்டில் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



Newsletter

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...