பாலியல் பலாத்கார வழக்கில் ஆசாராம் பாபு குற்றவாளி: ஜோத்பூர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் சாமியார் ஆசாராம் பாபு உள்ளிட்ட 5 பேர் குற்றவாளிகள் என ஜோத்பூர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.

16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் சாமியார் ஆசாராம் பாபு உள்ளிட்ட 5 பேர் குற்றவாளிகள் என ஜோத்பூர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.

16 வயது சிறுமி உள்ளிட்ட பல பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக சாமியார் ஆசாராம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக 2013-ம் ஆண்டு முதல் அவர் சிறையில் இருந்து வருகிறார். இந்நிலையில், இவ்வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சாமியார் ஆசாராம் பாபுவை நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தால் சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்பதால், அவர் அடைக்கப்பட்டுள்ள ஜோத்பூர் சிறைக்கே சென்று நீதிபதி மதுசூதனன் தீர்ப்பு வழங்கினார்.

அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவரை குற்றவாளி என நீதிபதி தீர்ப்பளித்தார். இன்று மாலைக்குள் முழு தண்டனை விபரம் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆசாராமிற்கு 10 ஆண்டு வரை சிறை தண்டனை வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. அதே சமயம், சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்தால் தூக்கு தண்டனை முதல் ஆயுள் தண்டனை வரை வழங்கும் அவசர சட்டத்தை சமீபத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ளதால், ஆசாராமிற்கு 10 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை வழங்கப்பட வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

ஆசாராம் வழக்கில் தீர்ப்பு வழங்கப்படுவதால் ராஜஸ்தான், அரியானா, உத்தரபிரதேசம், குஜராத், பஞ்சாப், மத்திய பிரதேசத், பஞ்சாப் உள்ளிட்ட 8 மாநிலங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆசாராமின் ஆசிரமங்களுக்கும், அவரால் பாதிக்கப்பட்ட பெண்களின் குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. முக்கியமாக, ஜோத்பூரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆசாராமிற்கு அதிகபட்சம் தண்டனை வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்ட பெண்ணின் தரப்பில் வாதிடப்பட்டு வருகிறது. அதேசமயம், ஆசாராமின் வயதைக் கருத்தில் கொண்டு குறைந்தபட்ச தண்டனை விதிக்க வேண்டும் என ஆசாராம் தரப்பு வழக்கறிஞர் கோரிக்கை வைத்துள்ளார். ஆசாராம் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதை பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர், சமூர் ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் வரவேற்றுள்ளனர். ஆனால், ஆசாராமிற்கு வழங்கப்பட்டுள்ள தீர்ப்பை அறிந்து அவரது ஆதரவாளர்கள் கண்ணீர் விட்டுக் கதறி அழுது வருகின்றனர். முன்னதாக, இன்று வழங்கப்படும் தீர்ப்பு ஆசாராமிற்கு சாதகமாக வர வேண்டும் என ஆமதாபாத் உள்பட பல இடங்களில் உள்ள அவரது ஆசிரமங்களில், ஆதரவாளர்கள் பலர் சிறப்பு வழிபாடு நடத்தியது குறிப்பிடத்தக்கது.

Newsletter

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...