ஜல்லிக்கட்டு வன்முறை சம்பவம்: கோவையில் இறுதிகட்ட விசாரணை தொடக்கம்

கோவை: ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது கோவையில் நடைபெற்ற வன்முறைச் சம்பவம் தொடர்பாக ஐந்தாம் கட்ட விசாரணையை ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் இன்று தொடங்கினார்.


கோவை: ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது கோவையில் நடைபெற்ற வன்முறைச் சம்பவம் தொடர்பாக ஐந்தாம் கட்ட விசாரணையை ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் இன்று தொடங்கினார்.

தமிழகம் முழுவதும் கடந்த ஆண்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது சட்டம் ஒழுங்கு முழுமையாக பாதிக்கப்பட்டது. அமைதியான முறையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் காவல்துறையினர் தடியடி நடத்தியதே இந்த பிரச்சினைக்கு காரணம் என்று ஒரு சாரர் குற்றம்சாட்டினர். இளைஞர்கள் போராட்டத்தில் சமூக விரோதிகள் புகுந்ததே வன்முறைக்குக் காரணம் என்று சிலர் குற்றம் சாட்டினர்.

இந்த நிலையில், ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது ஏற்பட்ட சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்கு யார் காரணம்? என்று விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு கோவையில் பொதுமக்கள் மற்றும் போலீசாரிடம் நான்கு முறை விசாரணை நடத்தியுள்ளது.

தொடர்ந்து, இறுதி விசாரணையான ஐந்தாம் கட்ட விசாரணையை நடத்த விசாரணைக் குழு இன்று கோவை வந்துள்ளது. இதுகுறித்து விசாரணைக் குழு ஆணையர் ராஜேஸ்வரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "இன்று முதல் மூன்று நாட்கள் நடக்கும் இறுதி விசாரணையில் கோவை மாநகர காவல்துறை துணை ஆணையர் லட்சுமி உட்பட 6 காவல்துறை அதிகாரிகளிடம் விசாரணை நடைபெறுகிறது. சம்மன் கொடுத்து விசாரணைக்கு வராதவர்களை நாங்கள் வற்புறுத்துவதில்லை. ஜல்லிக்கட்டு தொடர்பான விசாரணையில் கோவையில் பாதிக்குப் பாதி பேர் காவல்துறைக்கு ஆதரவாகவும், எதிராகவும் வாக்குமூலம் அளித்துள்ளனர். அடுத்து மதுரையிலும், சென்னையிலும் விசாரணை தொடரும். பத்திரிக்கையாளர்களிடம் நடந்த விசாரணையில் அவர்கள் ஆதாரங்களையும், புகைப்படங்களையும் கொடுத்துள்ளனர். மேலும் மதுரையில் 800-க்கு மேற்பட்டோரிடம் விசாரணை நடைபெற்றது. அதில் அலங்கநால்லூரில் போராடியவர்கள் போலீசாருக்கு ஆதரவாகத்தான் வாக்குமூலம் அளித்துள்ளனர்." என்றார்.

Newsletter

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...