எதிர்கட்சிகளை ஒருங்கிணைக்கும் 3-வது அணிக்கு ஸ்டாலின் ஆதரவு : காங்கிரசுடனான கூட்டணிக்கு முற்றுப்புள்ளியா..?

பா.ஜ.க., காங்கிரஸ் அல்லாமல் எதிர்கட்சிகள் ஒருங்கிணைந்து உருவாக்கும் மெகா கூட்டணிக்கு தி.மு.க. செயல்தலைவர் ஆதரவு தெரிவித்துள்ளார்.

பா.ஜ.க., காங்கிரஸ் அல்லாமல் எதிர்கட்சிகள் ஒருங்கிணைந்து உருவாக்கும் மெகா கூட்டணிக்கு தி.மு.க. செயல்தலைவர் ஆதரவு தெரிவித்துள்ளார். 

தேசிய அளவில் மாநில கட்சிகளை ஒன்றிணைத்து பா.ஜ.க, காங்கிரஸ் இல்லாத மெகா கூட்டணியை உருவாக்க மேற்குவங்க முதலமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, தெலுங்கானா மற்றும் ஆந்திர முதலமைச்சர்களும் முயற்சித்து வருகின்றனர். இந்தக் கூட்டணியில் தி.மு.க.,வை இணைய வருமாறு மார்ச் மாதம் செயல் தலைவர் ஸ்டாலினுக்கு மம்தா அழைப்பு விடுத்தார். இதன் தொடர்ச்சியாக இம்மாதம் சென்னை வந்து தி.மு.க., தலைவர் கருணாநிதியை சந்திக்கவும் மம்தா திட்டமிட்டிருந்தார். ஆனால் மம்தாவின் அழைப்புக்கு தி.மு.க. தரப்பில் இதுவரை எந்த பதிலும் அளிக்கப்படவில்லை.

இந்நிலையில், இன்று ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில், மாநில கட்சிகளை ஒன்றிணைத்து வலுவான கூட்டணியை உருவாக்கும் முயற்சிக்கு தி.மு.க., எப்போதும் ஆதரவு அளிக்கும். பா.ஜ.க.,வின் ஜனநாயக விரோத, சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக பல்வேறு மாநில கட்சிகளை இணைக்கும் மம்தாவின் முயற்சியைப் பாராட்டுகிறேன், எனக் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது வரை காங்கிரஸ் உடன் கூட்டணியில் இருந்து வரும் தி.மு.க., காங்கிரஸ், பா.ஜ.க., அல்லாத 3-வது அணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இதன்மூலம் காங்கிரசுடன் கூட்டணியை முறித்துக் கொள்ளும் முடிவுக்கு தி.மு.க., வந்துள்ளதா என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.

Newsletter

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...