ஸ்மார்ட் திட்டங்கள் குறித்து நாடாளு., நிலைக்குழுவிடம் கோவை மாநகராட்சி ஆணையர் இன்று விளக்கம்

கோவை: கோவை மாநகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் குறித்து டெல்லியில் நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் மாநகராட்சி ஆணையாளர் க. விஜயகார்த்திகேயன் இன்று எடுத்துரைக்கிறார்.

கோவை: கோவை மாநகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் குறித்து டெல்லியில் நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் மாநகராட்சி ஆணையாளர் க. விஜயகார்த்திகேயன் இன்று எடுத்துரைக்கிறார்.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை முதற்கட்டமாக செயல்படுத்த 100 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டன. அதில், கோவையும் இடம்பெற்றிருந்தது. மத்திய - மாநில அரசுகளின் நிதி மற்றும் மாநகராட்சியின் பங்களிப்போடு பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக, மிதிவண்டி பகிர்தல், ஸ்மார்ட் பள்ளிகள், நீர்நிலைகள் மேம்பாடு, சென்சார் போர்டுகள் போன்ற திட்டங்கள் கோவை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.

மேலும், கட்டிடக் கழிவு மறுசுழற்சி மையம், மாதிரி சாலை உருவாக்குதல் போன்ற திட்டங்கள் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளன. இவ்வாறு, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் பணிகளை மத்திய அரசு அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வும் செய்து வருகின்றனர். இந்நிலையில், கோவை மாநகராட்சியின் பணிகளை அங்கீகரிக்கும் விதமாக, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வரும் நகரின் பட்டியலில் கோவை ஒன்பதாவது இடத்தைப் பெற்றுள்ளது.

ஸ்மார்ட் சிட்டி பட்டியலில் தேர்வு செய்யப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வரும் மாநகராட்சியின் அதிகாரிகள், தங்களின் செயல்பாடுகளை டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் அமைந்துள்ள நாடாளுமன்ற நிலைக்குழு முன்பு இன்று எடுத்துரைக்கின்றனர். கோவை மாநகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் குறித்து மாநகராட்சி ஆணையர் விஜயகார்த்திகேயன், அதிகாரிகளிடம் விளக்குகிறார். ராஜ்கோட், பூனே, புவனேஷ்வர், விசாகப்பட்டினம், கொச்சி மற்றும் டெல்லி ஆகிய நகரைச் சேர்ந்த அதிகாரிகளும் இதில் பங்கேற்கின்றனர். சிறப்பாக செயல்பட்ட மாநகராட்சிகளில், தமிழகத்தில் இருந்து கோவை மாநகராட்சி மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...