குட்கா ஊழல் வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

குட்கா ஊழல் முறைகேடு தொடர்பான வழக்கை சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றம் செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


குட்கா ஊழல் முறைகேடு தொடர்பான வழக்கை சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றம் செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குட்கா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்ய அமைச்சர், போலீஸ் உயரதிகாரிகள், அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக புகார் எழுந்தது. சென்னையில், குட்கா வியாபாரிகளிடம் கடந்த 2016 ஜூலையில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அதில், சிக்கிய ஒரு டைரியில், தமிழக அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் டி.ஜி.பி., ராஜேந்திரன் உள்ளிட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் பெயர் இருப்பதாக வருமான வரித்துறை தெரிவித்தது. அது தொடர்பான ஆவணங்களை தமிழக அரசிடம் கொடுத்து, நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொண்டது.

இதனிடையே, இது தொடர்பாக சி.பி.ஐ., விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என தி.மு.க., எம்.எல்.ஏ., ஜெ.அன்பழகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, அப்துல் குத்தூஸ் தலைமையிலான அமர்வு, குட்கா ஊழல் குறித்த லஞ்ச ஒழிப்பு விசாரணையை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி உத்தரவு பிறப்பித்துள்ளது.



நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:- பல அதிகாரிகள் அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளதால், வழக்கு விசாரணை நேர்மையாக நடக்க சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றப்படுகிறது. அப்போது, தான் மக்களுக்கு நம்பகத்தன்மை ஏற்படும். இது தொடர்பாக சி.பி.ஐ., அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்த வேண்டும். குட்கா உற்பத்தி, விற்பனை, சந்தையில் கிடைப்பது உள்ளிட்ட அனைத்தையும் விசாரிக்க வேண்டும். குட்கா ஊழல் தொடர்பாக போதிய விளம்பரம் அளித்து மக்களின் தகவல்களை பெற வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் கூறியுள்ளனர்.

Newsletter

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...