குண்டும் குழியுமாக காட்சியளிக்கும் பைக்காரா சாலை: கோடை சீசனுக்காக சீரமைக்க சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை

நீலகிரி: நீலகிரியில் குண்டும், குழியுமாக காணப்படும் பைக்காரா சாலையை சீரமைக்க உதகை மாநராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா..? என சுற்றுலா பயணிகளும், வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர்.


நீலகிரி: நீலகிரியில் குண்டும், குழியுமாக காணப்படும் பைக்காரா சாலையை சீரமைக்க உதகை மாநராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா..? என சுற்றுலா பயணிகளும், வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர்.



நீலகிரி மாவட்டம் அதிகப்படியான சுற்றுலா தலங்களை உள்ளடக்கிய மாவட்டமாகும். இதில், தோட்டக்கலை மற்றும் சுற்றுலாத் துறைக்கு சொந்தமான சுற்றுலா ஸ்தலங்கள் நிறைய உள்ளன. குறிப்பாக, அதிகப்படியான சுற்றுலாப் பயணிகளை கவரும் சுற்றுலாத் துறைக்கு சொந்தமான பைக்காரா படகு இல்லமும் ஒன்று. உதகையிலிருந்து சுமார் 22 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த பைக்காரா படகு இல்லத்தைக் காண, அண்டை மாநிலங்கள் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வது வழக்கம்.

கூடலூர் செல்லும் சாலை பிரிவிலிருந்து பைக்காரா படகு இல்லம் செல்லும் சாலை பழுதடைந்த நிலையில் காணப்பட்டது. வாகன ஓட்டிகள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் மக்களின் கோரிக்கையை ஏற்று கடந்த ஓராண்டுக்கு முன்பு இந்த சாலை செப்பனிடப்பட்டது. ஆனால், தற்போது மீண்டும் பழைய நிலைக்கு திரும்பியுள்ளது. கூடலூர் பிரிவிலிருந்து பைக்காரா படகு இல்லத்திற்கு செல்லும் இந்த ஒரு கி.மீ. தூரமுள்ள சாலை, முறையாக வடிகால்கள் எடுக்கப்படாததால், மழை காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால், வாகன ஓட்டிகள் வாகனத்தை இயக்க மிகவும் சிரமப்படுகின்றனர். குறிப்பாக, இருசக்கர வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிப்படைகின்றனர்.



எனவே, நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் துவங்கியுள்ள நிலையில், படகு இல்லம் செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.



Newsletter

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...