சுகாதார சீர்கேட்டின் இருப்பிடமாக திகழும் கோவை மாநகராட்சி: தி.மு.க., எம்.எல்.ஏ., கார்த்திக் விமர்சனம்

கோவை: கோவை மாநகராட்சி சுகாதார சீர்கேட்டின் இருப்பிடமாக திகழ்ந்து வருவதாக தி.மு.க., எம்.எல்.ஏ., நா.கார்த்திக் குற்றம்சாட்டியுள்ளார்.

கோவை: கோவை மாநகராட்சி சுகாதார சீர்கேட்டின் இருப்பிடமாக திகழ்ந்து வருவதாக தி.மு.க., எம்.எல்.ஏ., நா.கார்த்திக் குற்றம்சாட்டியுள்ளார்.

தி.மு.க., மாநகர் தெற்கு மாவட்ட பொறுப்பாளரும், சிங்காநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான நா.கார்த்திக், உப்பிலிபாளையம் அருகே உள்ள ஜி.வி. ரெசிடென்சி பகுதியில் பாதாள சாக்கடை பணிக்காக சாலைகள் தோண்டப்பட்டு, சீரமைக்காமல் கிடக்கும் இடங்களை ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அந்தப் பகுதியில் உள்ள குடியிருப்புவாசிகள், மாநகராட்சி சார்பில் செய்யப்பட வேண்டிய பணிகள் மற்றும் அப்பகுதியில் உள்ள குறைகளை கூறினர். சாலைகள் அமைக்கப்படாமலும், சாலைகள் முழுவதும் புதர்கள் மண்டி கிடப்பதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினார்.



இந்த ஆய்வுக்கு பின்னர் நா.கார்த்திக் கூறுகையில், "தி.மு.க., ஆட்சியின்போது, கோவை மாநகராட்சி பாதாள சாக்கடை பணிக்காக ரூ. 377 கோடி ஒதுக்கப்பட்டு, பாதாள சாக்கடை பணி துவக்கபட்டது. ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு முழுமையாக செயல்படாமல் ஆமை வேகத்தில் இப்பணி நடைபெற்று வருகிறது. மேலும், மாநகராட்சியின் பல பகுதிகளில் குழிகள் தோண்டப்பட்டு மூடப்படாமல் உள்ளது. கேபிள் பதிப்பதற்காக ஒரு கிலோ மீட்டருக்கு அனுமதி பெறப்பட்டு, 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு குழி தோண்டியுள்ளனர். இதனால், பொதுமக்களுக்கு விபத்துகள் ஏற்படுகிறது. இதுதொடர்பாக அதிகாரிகளும் கண்டுகொள்வதில்லை.

இந்தப் பகுதியில் அனைவரும் முழுமையான வரியை செலுத்தியபோதும் கூட இப்பகுதியில் சாலைகள் அமைக்கப்படாமல் உள்ளது. கோவையைச் சேர்ந்த உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி எவ்வித பணிகளும் செய்வதில்லை. மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக இப்பகுதியில் சாலைகள் அமைக்கப்பட வேண்டும். இல்லையெனில், கூட்டணி கட்சிகளுடன் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம். செயழிலந்த மாநகராட்சியாக கோவை மாநகராட்சி திகழ்ந்து வருகிறது. சுகாதார சீர்கேட்டின் இருப்பிடமாகவும் இருக்கிறது. ஒட்டுமொத்த மாநகராட்சியும் தற்போது முடங்கிக் கிடக்கிறது.

இந்த ஆய்வின்போது, ஜி.வி.ரெசிடென்சி நல்வாழ்வு சங்கத்தின் தலைவர் நரசிம்மன், செயலாளர் செல்வகுமார், வார்டு செயலாளர்கள் சிவக்குமார் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Newsletter

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...