வால்பாறை, உதகையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

நீலகிரி : நீலகிரியில் சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி, காவல்துறையினர் சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


நீலகிரி : நீலகிரியில் சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி, காவல்துறையினர் சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 



உதகையில் கடந்த 23-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதன் ஒரு பகுதியாக, உதகை மலை ரயில்நிலையம் முன்பு சாலை பாதுகாப்பு குறித்தும், வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிய வேண்டும், மது அருந்தி விட்டு வாகனங்களை இயக்கக் கூடாது, சீட் பெல்ட் அணிந்து வாகனங்களை இயக்க வேண்டும் உள்ளிட்ட விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இருசக்கர வாகனப் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

நீலகிரி மாவட்ட காவல்துறை சார்பில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு பேரணியை காவல்துறை கண்காணிப்பாளர் முரளி ரம்பா கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்தப் பேரணில் ஆட்டோ ஓட்டுநர்கள், சுற்றுலா வாகன ஓட்டிகள், காவல்துறையினர் என 1௦௦-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்தப் பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சேரிங்கிராஸ் பகுதில் முடிவடைந்தது. மேலும், சுற்றுலாப் பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு சாலை பாதுகாப்பு குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.



இதேபோல, கோவை மாவட்டம் வால்பாறையில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை வட்டார போக்குவரத்து அலுவலர் நிர்மலாதேவி மற்றும் வால்பாறை காவல்துறை கண்காணிப்பாளர் திருமேனி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இதில், 100-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் வகையில் கலந்து கொண்டனர். இப்பேரணியானது, புதிய பேருந்து நிலையத்திலிருந்து தபால் நிலையம் வரை சென்றடைந்தது. 



மேலும், வால்பாறை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்காக வால்பாறை சுகாதார மருத்துவர்கள் விவின்பிரசாத், வித்யா ஆகியோர் தலைமையில் மருத்துவ முகாம் நடைபெற்றது.

Newsletter

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...