ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட 600 கிலோ மாம்பழங்கள் பறிமுதல்

நீலகிரி : நீலகிரியில் ரசாயனம் கொண்டு பழுக்க வைக்கப்பட்ட 600 கிலோ எடை கொண்ட மாம்பழங்களை உணவு மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

நீலகிரி : நீலகிரியில் ரசாயனம் கொண்டு பழுக்க வைக்கப்பட்ட 600 கிலோ எடை கொண்ட மாம்பழங்களை உணவு மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 



உதகை மார்க்கெட்டில் உள்ள கடைகளில் மாம்பழங்கள் ரசாயனம் கொண்டு பழுக்க வைக்கப்படுவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, உணவு மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள், மார்க்கெட் பகுதியில் உள்ள பழக் கடைகளில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, அங்கு இருந்த சில கடைகளில் மாம்பழங்கள், ஏத்தலின் கிராசரால் எனும் ரசாயனத்தைப் பயன்படுத்தி பழுக்க வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, அங்கிருந்து சுமார் 600 கிலோ மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டு கொண்டு செல்லப்பட்டது. 

இதைப் பற்றி அதிகாரிகள் கூறும்போது :- மாம்பழங்கள் மட்டும் இன்றி வாழைப்பழங்களும், இதே போன்று ரசாயனங்கள் கொண்டு பழுக்க வைக்கப்படுகிறது. இது மனிதர்களுக்கு மிகவும் ஆபத்தானது. இதைப்போன்று ரசாயனங்கள் கொண்டு பழுக்க வைக்கப்பட்ட பலன்களை உண்பதால் வயிற்றுப் போக்கு, தலைச்சுற்றல், வாந்தி போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது, அதுமட்டுமின்றி, புற்றுநோய் அபாயமும் உள்ளது. 

எனவே, பொதுமக்களுக்கு இதுபோன்ற விவகாரங்கள் தெரிய வந்தால், உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் அளிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டனர். 

பல்வேறு நாடுகளில் இருந்தும் இயற்கையின் அழகை ரசிப்பதற்காக சுற்றுலா நகரமான உதகையில் வந்து கொண்டிருக்கும் வேளையில், இதுபோன்ற சம்பவம் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. 

Newsletter

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...