கோவையில் சூறாவளி காற்றுடன் பெய்த கனமழை : மேற்கூரைகள் பறந்ததால் அலறிய ஊழியர்கள்

கோவை : கோவையில் கனமழையுடன் பலத்த காற்று வீசியதால் பெரும்பாலான நிறுவனங்களின் மேற்கூரைகள் பறந்ததால் ஊழியர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர்.


கோவை : கோவையில் கனமழையுடன் பலத்த காற்று வீசியதால் பெரும்பாலான நிறுவனங்களின் மேற்கூரைகள் பறந்ததால் ஊழியர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். 

கோவையில் இன்று மாலை பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. குறிப்பாக, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் பலத்த சூறாவளி காற்று வீசியது. இதன் காரணமாக கட்டிடங்களில் பொருத்தப்பட்டிருந்த மேற்கூரைகள் பறந்தன. பலத்த சத்தத்துடன் அவை கீழே விழுந்ததை கண்டு ஆங்காங்கே நின்று கொண்டிருந்தவர்கள் மற்றும் ஊழியர்கள் அலறி அடித்து கட்டிட வளாகத்தின் உள்ளே ஓடினர்.தொடர்ந்து காற்றின் வேகம் காரணமாக புழுதி பறந்து அலுவலகத்தினுள் வந்ததால், பழைய கட்டிடத்தில் பணி புரிந்த ஊழியர்கள் கதவை அடைத்து விட்டனர். இந்த சூறாவளி காற்றின் காரணமாக மின் தடையும் ஏற்பட்டதால் சிரமத்திற்கு ஆளாகினர். சாலையில் சென்று கொண்டிருந்த வாகன ஓட்டிகள் ஆங்காங்கே நிறுத்தி விட்டு காற்றின் வேகம் தணிந்த பின்னர் கிளம்பி சென்றனர்.​

இதனைத் தொடர்ந்து மழை பெய்ய தொடங்கியது. வெயிலின் உக்கிரத்தால் கடந்த சில தினங்களாக பொதுமக்கள் அவதியடைந்து வந்த நிலையில், தற்போது பெய்த மழையின் காரணமாக சில்லென்ற காற்று வீசுகிறது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இடையர்பாளையம் பகுதியில் ஆலங்கட்டி மழை பெய்தது. துடியலூர், கவுண்டம்பாளையம், பீளமேடு, காந்திபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. மேலும், ஆர்.எஸ்.புரம் உள்ளிட்ட பகுதிகளில் மரங்கள் சாலைகளில் சாய்ந்ததால் சிலர் படுகாயம் அடைந்தனர். 

மழை நின்ற பிறகு கோவையின் பிரதான சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஈடுபட்டுள்ளது. 

Newsletter

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...