சூறைக் காற்றால் சரிந்த மரம் : தகவல் கிடைத்த 90 நிமிடங்களில் அப்புறப்படுத்திய குழு

கோவை : கோவையில் வீசிய சூறாவளி காற்றால் சாய்ந்த மரத்தினை 90 நிமிடங்களில் அகற்றிய மாநகராட்சி ஊழியர்களின் துரித நடவடிக்கையை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

கோவை : கோவையில் வீசிய சூறாவளி காற்றால் சாய்ந்த மரத்தினை 90 நிமிடங்களில் அகற்றிய மாநகராட்சி ஊழியர்களின் துரித நடவடிக்கையை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.



கோவை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று மாலை 06 மணியளவில் கனமழை பெய்தது. அப்போது, புயல் போல வீசிய சூறைக் காற்றினால், கட்டிடங்களின் மேற்கூறைகள் பறந்து சென்றன. மேலும், சாலைகளில் கிடக்கும் மணல் துகள்களால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். 

இதனிடையே, வெங்கடசாமி சாலை, புது சித்தாபுதூர் பகுதியில் இருந்த பெரிய வேப்பம் மரம் ஒன்று இந்தக் காற்றுக்கு சரிந்து விழுந்தது. இதில், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் பெரும் சேதமடைந்தன. மேலும், மின்சார வயர்களின் மீது விழுந்ததால், தீப்பொறி கிளம்பியதுடன், அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.



இந்த சம்பவம் தொடர்பாக மாநகராட்சி ஆணையருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக மீட்பு குழு, மின்சார ஊழியர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பின்னர், சுமார், 90 நிமிடங்களில் உள்ளூர் மக்களின் உதவியுடன் சாலையில் கிடந்த மரம் அப்புறப்படுத்தப்பட்டது. மேலும், மின்சாரமும் சீர்செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, சம்பவ இடத்தை மாவட்ட தீயணைப்பு அதிகாரி நேரில் பார்வையிட்டார்.

தகவல் அறிந்த சில மணி நேரங்களிலேயே, எந்தவித உயிர்சேதமும் இல்லாமல் பணிகளை துரிதமாக செய்து முடித்த குழுவினருக்கு பொதுமக்கள் பாரட்டுக்களை கூறி வருகின்றனர். இதனிடையே, திறம்பட செயல்பட்ட தீயணைப்பு வீரர்கள் மலைசாமி, ரவிச்சந்திரன், பாபு, ஜீவா மற்றும் பாலமுருகன், மாநகாரட்சி ஜே.சி.பி. ஓட்டுநர் இளவரசன் ஆகியோரை கவுரவிக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...