பூரண மது விலக்கை அமல்படுத்தக் கோரி கோவையில் சக்தி சேனா இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கோவை: பூரண மது விலக்கை அமல்படுத்தக் கோரி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று சக்தி சேனா இயக்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை: பூரண மது விலக்கை அமல்படுத்தக் கோரி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று சக்தி சேனா இயக்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மக்கள் குறை தீர்ப்பு நாளான இன்று, தமிழகத்தில் பூரண மது விலக்கை அமல்படுத்தக் கோரி சக்தி சேனா இயக்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்திருந்தனர். முன்னதாக, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மது பாட்டில்களை மாலையாக அணிந்து தரையில் படுத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் கண்டித்ததை தொடர்ந்து பூரண மது விலக்கை வலியுறுத்தி அவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அந்த அமைப்பினர், "சமூக விரோத செயல்கள் அதிகரிக்க மதுவே காரணம். தந்தையின் குடிப்பழக்கம் காரணமாக நெல்லையில் தினேஷ் என்ற இளைஞர் தற்கொலை செய்த கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் நலனை மனதில் கொண்டு பூரண மது விலக்கு அமல்படுத்த வேண்டும்." என்றனர்.

Newsletter

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...