மலை பூண்டின் விலை கடும் வீழ்ச்சி: கிலோ ரூ.10-க்கு விற்பனையாவதால் விவசாயிகள் கவலை

கோவை: விளைச்சல் அதிகரிப்பால் நீலகிரி மலை பூண்டு முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரு கிலோ ரூ.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கோவை: விளைச்சல் அதிகரிப்பால் நீலகிரி மலை பூண்டு முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரு கிலோ ரூ.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மற்ற மாநிலங்களில் விளையும் பூண்டுகளை விட, நீலகிரி மாவட்டத்தில் விளையும் மலை பூண்டிற்கு வரவேற்பு அதிகம். இதில் காரத் தன்மையும், சுவையும் அதிகம் என்பதால் பொதுமக்கள் இதனை விரும்பி வாங்குகின்றனர். அதேபோல், வெளிமாநில விவசாயிகளும் விதைக்காக இதனை வாங்கிச் செல்கின்றனர். நீலகிரி மலை பூண்டிற்கான சந்தை மலை அடிவார பகுதியான மேட்டுப்பாளையத்தில் இயங்கி வருகிறது. இதனால், நீலகிரி மாவட்டத்தில் விளையும் அனைத்து பூண்டுகளும் இங்கு கொண்டு வரப்பட்டு ஏலம் மூலம் விற்பனை செய்யப்படுவது வழக்கம்.



ஜனவரி மாதம் தொடங்கி ஜூன் மாதம் வரை நீலகிரியில் பூண்டு அறுவடை செய்யப்படுகிறது. இந்த சீசனின் தொடக்கத்தில் ஒரு கிலோ பூண்டு ரூ. 100 முதல் ரூ. 150 வரை விற்பனையான நிலையில், தற்போது அதன் விலை கடுமையாக சரிந்து ரூ.10-க்கு விற்பனையாகி வருகிறது. பருவநிலை சரியாக இருந்த காரணத்தினால் கடந்தாண்டை விட இவ்வாண்டு இரண்டு மடங்கிற்கு மேல் விளைச்சல் கிடைத்துள்ளது. இதனால் வரத்து அதிக அளவிலும், தேவை குறைவாகவும் இருப்பதன் காரணமாக விலை சரிந்துள்ளதாக வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.



ஆனால், போட்ட கொள்முதலில் பத்து சதவீகிதம் கூட கிடைக்காத காரணத்தால் பூண்டு விவசாயிகள் கடும் இழப்பை சந்தித்து வருகின்றனர். மேலும், ஒரு மாத காலத்திற்கு இந்நிலை நீடிக்கும் என்பதால் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...