குடிநீர் திட்டத்தை நிறைவேற்றித்தர வலியுறுத்தி ஜீவ சமாதி அடையும் போராட்டம்: பெண் கைது

திருப்பூர்: அத்திக்கடவு- அவினாசி கூட்டுக் குடிநீர் திட்டத்தை நிறைவேற்றித்தர வலியுறுத்தி நேற்று அவினாசியில் ஜீவ சமாதி அடையும் போராட்டம் நடத்திய பெண் சமூக ஆர்வலரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர்: அத்திக்கடவு- அவினாசி கூட்டுக் குடிநீர் திட்டத்தை நிறைவேற்றித்தர வலியுறுத்தி நேற்று அவினாசியில் ஜீவ சமாதி அடையும் போராட்டம் நடத்திய பெண் சமூக ஆர்வலரை போலீசார் கைது செய்தனர்.

சென்னையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் நர்மதா(39). இவர் அவினாசி புதிய பேருந்து நிலையம் முன்பு அத்திக்கடவு-அவினாசி கூட்டு குடிநீர் திட்டத்தை நிறைவேற்றித்தர வலியுறுத்தி நேற்று மாலை உயிருடன் சமாதி அடையும் போராட்டத்தில் ஈடுபட்டார்.

இது குறித்து அவர் கூறுகையில், "அத்திக்கடவு- அவினாசி கூட்டு குடிநீர் திட்டமானது கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மூன்று மாவட்ட மக்களுக்குத் தேவைப்படும் அத்தியாவசியத் திட்டம். இன்று இந்த மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் வறட்சியால் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். மூன்று தலைமுறைகளாக இத்திட்டம் வேண்டி போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை நிறைவேற்றுவதாக அரசு வாக்குறுதி கொடுத்தது. ஆனால், இன்று வரை அடிக்கல் கூட நாட்டவில்லை. இத்திட்டம் தொடர்பாக அ.தி.மு.க., அரசு வெறும் அறிவிப்புகளை மட்டும் வெளியிட்டு வருகிறது. ஜெயலலிதாவுக்கு மணிமண்டபம் கட்டுவதற்கு உடனே பணிகள் நடந்து வருகிறது. ஆனால், விவசாயிகளுக்கு அத்தியாவசியத் தேவையான இத்திட்டத்தை நிறைவேற்றித்தர அரசு தாமதிக்கிறது. ஆகவே, அத்தியாவசியத் திட்டத்தை நிறைவேற்றித்தர வலியுறுத்தி உயிருடன் சமாதி அடையும் போராட்டத்தில் ஈடுபட்டேன்." என்றார்.

இதையடுத்து, அப்பகுதியில் படுத்தபடி போராட்டத்தை நர்மதா தொடர்ந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற அவினாசி போலீசார் அவரிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, முன் அனுமதி இன்றி இது போன்ற போராட்டங்களில் ஈடுபடக்கூடாது என்று போலீசார் எச்சரித்தனர். அப்போது அவர் போராட்டத்தை தொடர்ந்து நடத்துவேன் என்றார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். சிறிது நேரம் காவலில் வைத்த பின்னர் அவரை விடுவித்தனர்.



Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...