கோவையில் கார்பைடு கல் மூலம் பழுக்க வைக்கப்பட்ட 500 கிலோ மாம்பழங்கள் பறிமுதல்

கோவை: உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் இன்று கோவையில் நடத்திய சோதனையில் கார்பைடு கல் மூலம் பழுக்க வைக்கப்பட்ட 500 கிலோ மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.


கோவை: உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் இன்று கோவையில் நடத்திய சோதனையில் கார்பைடு கல் மூலம் பழுக்க வைக்கப்பட்ட 500 கிலோ மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கார்பைடு கல் வைத்து செயற்கை முறையில் பழுக்கவைக்கப்பட்ட மாம்பழங்கள் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் ஒன்றாகும். ஆனால், லாப நோக்கில் சில வியாபாரிகள் மாம்பழங்களை செயற்கை முறையில் பழுக்க வைத்து வருகின்றனர். இது குறித்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது.

தகவலின் பேரில் உக்கடம் பேருந்து நிலையம் எதிரே உள்ள பழக்கடைகளில் அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, கார்பைடு கல் வைத்து பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் விற்பனைக்கு இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து, அந்த மாம்பழங்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவற்றை அழித்தனர்.



இது குறித்து உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரி விஜயலலிதாம்பிகை கூறுகையில், "உக்கடம் பகுதியில் இன்று 16 பழக்கடைகளில் சோதனை நடத்தியுள்ளோம். இதில் மொத்த வியாபாரம் செய்யும் ஒரு பழக்கடையில் மட்டும் கார்பைடு மூலம் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து, விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 500 கிலோ மாம்பழங்களை பறிமுதல் செய்துள்ளோம்.



கோவையில் மாம்பழ வரத்து குறைவாக உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். மாம்பழ வரத்து அதிகரிக்கும் நேரத்தில் மீண்டும் இந்த சோதனை நடத்தப்படும். கார்பைடு கல் மூலம் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களை விற்பனை செய்வது தெரியவந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்." என்றார். 

Newsletter

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...