குழந்தைகளுக்கு நொறுக்குத் தீனி கொடுப்பதைத் தவிர்க்க அறிவுரை

திருப்பூர் : திருப்பூரில் உணவு பாதுகாப்பு துறை சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் குழந்தைகளுக்கு காற்றடைத்த நொறுக்கு தீனிகளை தவிர்க்க உணவு பாதுகாப்புத் துறையினர் அறிவுறுத்தினர்.

திருப்பூர் : திருப்பூரில் உணவு பாதுகாப்பு துறை சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் குழந்தைகளுக்கு காற்றடைத்த நொறுக்கு தீனிகளை தவிர்க்க உணவு பாதுகாப்புத் துறையினர் அறிவுறுத்தினர்.



மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உணவு பாதுகாப்புத் துறை சார்பில் உணவுப் பொருட்களில் கலப்படம் செய்யப்படுவது குறித்த பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், உணவுப் பொருட்களில் கலப்படம் செய்யப்பட்டிருந்தால் அதனை எவ்வாறு கண்டறிவது? என்பது குறித்த எளிய செய்முறை விளக்கங்களை பொதுமக்களுக்கு செய்து காட்டினர். 



மேலும், குழந்தைகள் அதிக அளவில் வாங்கி உண்ணக் கூடிய காற்றடைத்து பாக்கெட் செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் நிறம் சேர்க்கப்பட்ட பொருட்களைத் தவிர்த்து, கடலை மிட்டாய் போன்ற எளிய சத்தான பொருட்களை சிறுவர்களுக்கு தருமாறு பெற்றோரிடம் அறிவுறுத்தப்பட்டது. 

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், கலப்பட பொருட்களை நிறங்களைக் கொண்டு எவ்வாறு கண்டறிவது? என்பது குறித்து உணவு பாதுகாப்புத் துறை சார்பில் விளக்கங்கள் அளிக்கப்பட்டது.

Newsletter

தேசிய இணைய பரிமாற்ற மையத்தில் இணைய நிர்வாக பயிற்சிக்கு SRIT மாணவி தேர்வு

கோயம்புத்தூர் Sri Ramakrishna Institute of Technology மாணவி ஷாலினி ஏ., புது தில்லி தேசிய இணைய பரிமாற்ற மையம் (NIXI) வழங்...

விவசாய நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் விற்றவர் கைது - கோவை குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை

அரசு வழங்கிய பட்டியலினருக்கான விவசாய நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்து ஏமாற்றியதாக எழுந்த புகாரில், கவுண்டம்பாள...

கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு 20 தற்காலிக அரசு வழக்கறிஞர்கள் நியமனம்

கோவை மாவட்டத்திலுள்ள பல்வேறு நீதிமன்றங்களில் அரசு தரப்பில் ஆஜராக 20 தற்காலிக அரசு வழக்கறிஞர்களை தமிழக அரசு நியமித்துள்ளத...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...