விவசாய நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் விற்றவர் கைது - கோவை குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை

அரசு வழங்கிய பட்டியலினருக்கான விவசாய நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்து ஏமாற்றியதாக எழுந்த புகாரில், கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த மணி (65) என்பவர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.


கோவை: கோவை சூலூர் சிவகாமி நகரைச் சேர்ந்த சந்திரசேகர் (48), கடந்த 2010-ஆம் ஆண்டு தனது குடும்பத்தைச் சேர்ந்த 13 பேருடன் இணைந்து, கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த மணி (65) என்பவரிடம் இருந்து பொள்ளாச்சி அருகே சோலனூரில் உள்ள 97 மனைகளை வாங்கியுள்ளார்.

பின்னர், அந்த மனைகள் பட்டியலினத்தைச் சேர்ந்த நிலமற்ற விவசாயிகளுக்கு அரசு வழங்கப்பட்ட விவசாய நிலங்கள் என்பதும், நில உரிமையாளர்களை ஏமாற்றி மணி அவற்றை விற்பனை செய்திருந்ததும் சந்திரசேகருக்கு தெரியவந்துள்ளது.

இதுகுறித்து மணியிடம் கேட்டபோது, அனைத்து பிரச்சினைகளையும் சரிசெய்து நிலத்தை விரைவில் பத்திரப்பதிவு செய்து தருவதாகக் கூறியதுடன், போலி ஆவணங்கள் மூலம் பத்திரங்களையும் தயாரித்து வழங்கியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, பத்திரங்கள் கிடைத்ததைத் தொடர்ந்து சந்திரசேகர் வாங்கிய நிலத்தில் வீடு கட்டும் பணியைத் தொடங்கியுள்ளார். அப்போது, கிராம நிர்வாக அலுவலர் கட்டுமானப் பணியை நிறுத்தி, இது விவசாய நிலம், வீடு கட்ட அனுமதி இல்லை என தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதன்பின்பு தான் மணி அவரைஏமாற்றியது சந்திரசேகருக்கு தெரியவந்துள்ளது.

இதையடுத்து அவர் கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு, போலி ஆவணங்கள் தயாரித்து பட்டியலினருக்கான விவசாய நிலத்தை விற்றதாக குற்றம்சாட்டப்பட்ட மணி என்பவரை கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கில் மேலும் தொடர்புடைய நபர்கள் உள்ளனரா என்பது குறித்தும் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

தேசிய இணைய பரிமாற்ற மையத்தில் இணைய நிர்வாக பயிற்சிக்கு SRIT மாணவி தேர்வு

கோயம்புத்தூர் Sri Ramakrishna Institute of Technology மாணவி ஷாலினி ஏ., புது தில்லி தேசிய இணைய பரிமாற்ற மையம் (NIXI) வழங்...

விவசாய நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் விற்றவர் கைது - கோவை குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை

அரசு வழங்கிய பட்டியலினருக்கான விவசாய நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்து ஏமாற்றியதாக எழுந்த புகாரில், கவுண்டம்பாள...

கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு 20 தற்காலிக அரசு வழக்கறிஞர்கள் நியமனம்

கோவை மாவட்டத்திலுள்ள பல்வேறு நீதிமன்றங்களில் அரசு தரப்பில் ஆஜராக 20 தற்காலிக அரசு வழக்கறிஞர்களை தமிழக அரசு நியமித்துள்ளத...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...