குழந்தை தொழிலாளியாக இருந்து மீட்கப்பட்ட மாணவர் 1,093 மதிப்பெண்கள் பெற்று சாதனை

கோவை: குழந்தைத் தொழிலாளியாக இருந்து மீட்கப்பட்ட மாணவர் 1,093 மதிப்பெண் எடுத்து சாதனை படைத்துள்ளார்.


கோவை: குழந்தைத் தொழிலாளியாக இருந்து மீட்கப்பட்ட மாணவர் 1,093 மதிப்பெண் எடுத்து சாதனை படைத்துள்ளார்.

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர்களாக பணி புரிந்த 8 பேர் சமீபத்தில் மீட்கப்பட்டனர். அதில் ஏழு பேர் பிளஸ் 2 தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர்.



அவ்வாறு மீட்கப்பட்ட மாணவர்களில் எஸ். தரணிதரன், இ. ஜெகதீஷ், வி.லாவண்யா, பி.ராஜேஸ்வரி, வி.தினேஸ், எல்.சொப்னில் ஆகியோர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

குழந்தை தொழிலாளியாக இருந்த மீட்கப்பட்ட தரணிதரன் 1,093 மதிப்பெண் பெற்ற நிலையில், மருத்துவம் படிக்க போவதாகவும் அதற்காக நீட் தேர்வு எழுதியதாகவும் தெரிவித்தார்.



இது குறித்து அவர் கூறுகையில், "குடும்ப சூழ்நிலை காரணமாக 7-ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது திருப்பூரில் பனியன் கம்பெனியில் பணிக்கு சென்றேன் அதன் பின் குழந்தை தொழில் ஒழிப்பு அதிகாரிகளால் கண்டறியப்பட்டு சிறப்பு முகாமில் சேர்க்கப்பட்டு கல்வி பயின்றேன். மருத்துவம் படித்து இருதய நோய் நிபுணராக வரவேண்டும் என்பதே எனது ஆசை. நீட் தேர்வு எழுதியுள்ளேன். என்னைப் போன்ற குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டு கல்வி பயில வேண்டும்." என்றார்.

Video: A.Vignesh

Newsletter

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...