அன்னூர் அருகே வேன் மரத்தில் மோதி விபத்து: இருவர் பலி - பத்து பேர் படுகாயம்

மேட்டுப்பாளையம்: உதகைக்கு சுற்றுலா செல்வதற்காக வந்தவர்களின் வேன் அன்னூர் அருகே மரத்தில் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.

மேட்டுப்பாளையம்: உதகைக்கு சுற்றுலா செல்வதற்காக வந்தவர்களின் வேன் அன்னூர் அருகே மரத்தில் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டி பகுதியில் இருந்து 15-க்கும் மேற்பட்டோர் உதகைக்கு சுற்றுலா செல்வதற்காக மினி வேன் மூலம் நேற்று இரவு புறப்பட்டு வந்தனர். இன்று காலை மேட்டுப்பாளையம் அன்னூர் சாலை வழியாக உதைக்கு வந்த வேன் ஜெ.ஜெ நகர் என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தது. அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், சாலை அருகே இருந்த புளியமரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில், வேனில் பயணித்த ரிஷி என்ற ஒன்பது வயது சிறுவன் மற்றும் சீனிவாசன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 10-க்கும் மேற்பட்டோருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டது. இதனையடுத்து, இதுகுறித்து கிடைத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு அன்னூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை அனுப்பினர்.

மேலும், உயிரிழந்த இருவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்த போலீசார், விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...