திருப்பூரில் இளையோருக்கான தேசிய இறகுப் பந்து அணி தேர்வு போட்டி தொடக்கம்

திருப்பூர்: தேசிய இறகுப் பந்து அணிக்கு இளைஞர்களை தேர்வு செய்வதற்கான போட்டி திருப்பூரில் இன்று தொடங்கியது.

திருப்பூர்: தேசிய இறகுப் பந்து அணிக்கு இளைஞர்களை தேர்வு செய்வதற்கான போட்டி திருப்பூரில் இன்று தொடங்கியது.

இந்திய இறகுப் பந்து கழகம் சார்பில் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான இறகுப் பந்து அணி தேர்வுக்கான போட்டிகள் திருப்புர் மோகன்ஸ் அகாடமியில் இன்று தொடங்கியது. இந்த போட்டியில் இந்தியா முழுவதுமிருந்து பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 800 ஆண்கள் 400 பெண்கள் என 1200 இளம் வீரர்கள் கலந்து கொண்டனர்.



ஆண்கள் பிரிவு, பெண்கள், இரட்டையர் பிரிவுகள் மற்றும் கலப்பு இரட்டையர் என ஐந்து பிரிவுகளின் கீழ் 920 லீக் போட்டிகள் நடைபெறுகிறது. இதில் வெற்றி பெறும் வீரர்கள் ரேங்கிங் அடிப்படையில் முன்னணியில் உள்ள வீரர்களுடன், அரை இறுதி மற்றும் இறுதி போட்டிகளில் விளையாடுகின்றனர். இதில், வெற்றி பெறும் 14 வீரர்கள் தேசிய அணியில் இணைந்து விளையாடும் வாய்ப்பைப் பெறுவர்.

வீரர்களைத் தேர்வு செய்ய, இந்திய வீராங்கனையும், ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா சார்பில் பங்கேற்ற ஜூவாலா கட்டா, வரும் 25-ம் தேதி வருகிறார். வட மாநிலங்களில் மட்டுமே நடைபெறும் இந்திய அணி தேர்வு போட்டிகள் தமிழகத்தில் நடைபெறுவது தமிழக வீரர்களுக்கு சாதகமான அம்சத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், இது தமிழக வீரர்கள் வெற்றி பெற ஊக்கத்தை வழங்குவதாகவும் வீரர்கள் கூறினார்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...