நீலகிரியில் நிலச்சரிவு அபாயம்: வேளாண் பல்கலை., எச்சரிக்கை

கோவை: தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வரும் சூழலில் நீலகிரி மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகத்தின் வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம் தலைவர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

கோவை: தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வரும் சூழலில் நீலகிரி மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகத்தின் வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம் தலைவர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.



இது குறித்து அவர் சிம்ப்ளிசிட்டி-க்கு அளித்த பேட்டியில் கூறுகையில், "கோவையில் அடுத்த மூன்று நாட்களுக்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். மழைக்கு வாய்ப்புள்ளது.

இதனிடையே, பகல் நேர வெப்ப நிலையானது 28 முதல் 29 டிகிரி செல்சியஸ்-ஆகவும், இரவு நேர வெப்ப நிலை 21 முதல் 22 டிகிரி செல்சியஸ்-ஆகவும் நிலவ வாய்ப்புள்ளது. காற்றின் வேகம் 10 முதல் 12 கிலோ மீட்டர் வரை வீச வாய்ப்புள்ளது. விவசாயிகள் பயிர் அறுவடைகளை சற்று தள்ளிப்போடுவது நல்லதாக இருக்கும்.

கோவை, நீலகிரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தீவிரமடையும் மழையால் நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. வால்பாறை, சிறுவாணி போன்ற பகுதிகளில் 20 செ.மீ வரை மழை பதிவாகியுள்ளது.

மழை காரணமாக தண்ணீர் தேங்க வாய்ப்புள்ளதால் விவசாய நிலங்களில் வடிகால் அமைப்பது நல்லது. திராட்சை, மஞ்சள் போன்ற விவசாயத்தில் தற்போது பூச்சி தாக்க வாய்ப்புள்ளது தொடர் கண்காணிப்பில் இருக்க வேண்டும்.

நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் அரிமானம் ஏற்பட்டு நிலச்சரிவுக்கு வாய்ப்புள்ளது. எனவே கவனமுடன் இருக்க வேண்டும்." என்றார்.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...