வாய்க்கால், ஆறுகளை தூர்வாரும் பணிகளை பார்வையிட்ட அமைச்சர் எஸ்.பி. வேலுமணி

கோவை : கோவை மாநகராட்சியின் சார்பில் மேற்கொள்ளப்படும் ஆறுகள், வாய்க்கால்கள், குளங்களை தூர்வாருதல் போன்ற பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி நேரில் பார்வையிட்டார்.

கோவை : கோவை மாநகராட்சியின் சார்பில் மேற்கொள்ளப்படும் ஆறுகள், வாய்க்கால்கள், குளங்களை தூர்வாருதல் போன்ற பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி நேரில் பார்வையிட்டார். 



கோவை மாநகராட்சியில் 85வது வார்டு எம்.ஜி.ஆர் நகர் சேத்துமாவாய்க்காலில் மழைநீர் தங்குதடையின்றி செல்வதற்காக தூர்வாரப்பட்டுள்ளதையும், பொக்ளின் எந்திரம் மூலமாக மேலும் பணிகள் மேற்கொள்வதையும் அமைச்சர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், கிரீன் பார்க் பகுதியில் உள்ள வாய்க்காலில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதையும், 76-வது வார்டு, எல்.ஐ.சி காலனியில் உள்ள சேத்துமாவாய்க்கால் பகுதியினை பார்வையிட்டார்.



பின்னர், வாய்க்காலில் மழைநீர் செல்வதற்காகவும் அதிக மழையின்போது குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் வழிந்தோடாமல் தடுக்க முன்னெச்சரிக்கையாக தேவையான பணிகளை மேற்கொள்ளவும், கழிவு நீர் செல்ல வாய்க்கால் மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ளவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அவர் உத்தரவிட்டார். குறிச்சி என்.பி.இட்டேரி மற்றும் போத்தனூரில் 95-வது வார்டு பேச்சியம்மன் கோயில் தெருவில் உள்ள வாய்க்கால்களில் தண்ணீர் தடையின்றி செல்வதையும் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பார்வையிட்டார். 

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...