இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் கணவன், மனைவி உயிரிழப்பு

திருப்பூர்: திருப்பூர் அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் கணவன் மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

திருப்பூர்: திருப்பூர் அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் கணவன் மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.



அவினாசிலிங்கம்பாளையம் பகுதியில் கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அவிநாசி மோட்டார் வாகன ஆய்வாளர் செந்தில்ராம் வாகனங்களை நிறுத்தி ஆய்வு மேற்கொண்டிருந்தார். அப்போது, கோவை நோக்கி வேகமாக கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. அதன் ஓட்டுநர், வாகன ஆய்வில் ஈடுபட்டிருந்த அதிகாரி செந்தில்ராமை கவனிக்கவில்லை. கார் ஆய்வாளர் அருகே கார் சென்ற போது, திடீரென சுதாரித்துக் கொண்ட ஓட்டுநர் பதற்றத்தில், காரை வேகமாக திருப்பினார். அப்போது, முன்னால் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தில் மோதியது.



இந்த விபத்தில், இருசக்கர வாகனத்தில் பயணம் செய்து கொண்டிருந்த தெக்கலூரைச் சேர்ந்த பழனிசாமி மற்றும் அவரது மனைவி மல்லிகா இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதனையடுத்து, அங்கு திரண்ட பொதுமக்கள் விபத்திற்குக் காரணமான மோட்டார் வாகன ஆய்வாளர் செந்தில்ராம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த அனுப்பர்பாளையம் போலீசார், பொதுமக்களை சமாதானப்படுத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதன்பேரில், பொதுமக்கள் கலைந்து சென்றனர். மறியல் காரணமாக அரைமணி நேரத்திற்கும் மேலாகப் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.



Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...