பசுமை வழி சாலைக்கு எதிரான கருத்து : நடிகர் மன்சூர் அலிகான் கைது

சென்னை: சேலம் - சென்னை இடையே புதிதாக அமைக்கப்பட இருக்கும் எட்டு வழி சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருத்து தெரிவித்ததால் நடிகர் மன்சூர் அலிகானை போலீசால் கைது செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை: சேலம் - சென்னை இடையே புதிதாக அமைக்கப்பட இருக்கும் எட்டு வழி சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருத்து தெரிவித்ததால் நடிகர் மன்சூர் அலிகானை போலீசால் கைது செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் - சென்னை இடைப்பட்ட தூரத்தில் எட்டு வழி சாலை (பசுமை வழி சாலை) அமைப்பதில் தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதற்கு எதிரான கருத்துக்கள் எழுந்த போதிலும், சாலை அமைக்கப்படுவது உறுதி என்று தமிழக முதல்வர் கடந்த வாரம் சட்டப்பேரவையில் அறிவித்தார். 

பாதிப்பு

இந்த சாலை அமைக்கப்படும் போது பல ஆயிரக்கணக்காக விளை நிலங்கள் பாதிக்கப்படும் என்று கூறி எதிர்ப்பு தெரிவித்து, சாலைக்கான அறிவிப்பு வெளியான நாள் முதலே மக்கள் போராடி வருகிறார்கள். இதற்கு தமிழ் நடிகர்கள் சிலரும் குரல் கொடுத்திருந்தனர்.

அதேபோல், நடிகர் மன்சூர் அலிகான் சேலம் பசுமை வழிச்சாலை அமைக்க எதிராக கருத்து தெரிவித்து இருந்தார். இந்த சாலை முழுக்க முழுக்க மக்களுக்கு எதிரானது என்று குறிப்பிட்டார். இதனால் பல கோடி மரங்கள் தேவையில்லாமல் வெட்டப்படுகிறது. அரசு யாருக்கோ உதவி செய்ய இப்படி திட்டமிடுகிறது என்ற கருத்துக்களை முன் வைத்தார்.

இந்த நிலையில், சென்னை சூளைமேட்டில் வைத்து மன்சூர் அலிகானை போலீசார் கைது செய்தனர். சென்னை வந்த சேலம் போலீசார் அவரை கைது செய்து சேலம் சிறைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

சர்வாதிகாரம்

பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் அவ்வபோது பேசிவரும் பா.ஜ.க., தேசிய செயலாளர் எச்.ராஜா மீதும், பத்திரிக்கையாளர்களை தரக்குறைவாக விமர்சித்த நடிகர் எஸ்.வி.சேகர் மீதும் நடவடிக்கை எடுக்காத இந்த அரசு, மக்களுக்கு ஆதரவாக கருத்து கூறியதற்காக மன்சூர் அலிகானை கைது செய்திருப்பது சர்வாதிகாரப் போக்கு என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...